புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, காதி பயன்படுத்துவதை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானிய ஆணைய சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களுடைய சிறப்பான தருணங்களில், இந்தியாவின் பாரம்பரிய உடைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
காதி மற்றும் பிற கைத்தறி நெசவு ஆடைகளை உடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி இருக்கிறது இந்த யூ ஜி சி சுற்றறிக்கை. காதி மற்றும் கைவினை ஆடைகளை உடுத்துவதால் கிடைக்கும் நன்மைகளுக்கு இடையில் ஒரு "பெருமித உணர்வையும்" இந்த ஆடைகள் கொடுப்பதாகவும் சொல்கிறது.

"மாண்புமிகு பிரதமர் காதியைப் பயன்படுத்துவதை ஆதரித்தார், மேலும் கைத்தறிக்கு புத்துயிர் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தினார். மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தன் கைத் தறி துணியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார், எனவே இது சுதந்திரத்தின் சீராடையாக பார்க்கப்படுகிறது. காதி மற்றும் பிற கைத்தறி ஆடைகளைப் பயன்படுத்துவது, இந்தியராக இருப்பதற்கான பெருமையைத் தருவது மட்டுமல்லாமல், இந்தியாவின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்ததாகவும் இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறது இந்த யூ ஜி சி சுற்றறிக்கை.
இந்த சுற்றறிக்கை, நம் இந்திய நாட்டில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறது யூ ஜி சி தரப்பு. இந்தியாவில் சுமாராக 50,000 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த 50,000 கல்லூரிகளுக்கும் காதி ஆடைகளைப் பயன்படுத்தச் சொல்லி சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்களாம்.
சமீப காலமாக, இந்தியாவின் கல்லூரிகளில், பட்டமளிப்பு விழாக்களில், பாரம்பரிய ஆடைகளை பயன்படுத்துவது தொடர்பாக கோரிக்கைகளும், சர்ச்சைகளும் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. இப்போது கடைசியாக யூ ஜி சி அமைப்பே அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஏற்கனவே ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, குஜராத் பல்கலைக்கழகம், என் ஐ டி ஹமிர்பூர் போன்ற கல்லூரிகள், தங்களின் பட்டமளிப்பு விழா ஆடையாக காதியை மாற்றி இருக்கிறார்கள் என்பதும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டி இருக்கிறது. இதனால் காதி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு கொஞ்சமாவது வியாபாரம் பெருகும் என எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications