இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரசியல் பிரச்சனைக்கு மத்தியிலும் மோசமான நிலையை அந்நாட்டு மக்களும், வர்த்தக சந்தையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டின் வர்த்தகத்தை தொடர்வது பெரும் சிக்கல் இருப்பது மட்டும் அல்லாமல் வருமானம் பெரிய அளவில் சரிந்து வருகிறது.
இப்படியிருக்கையில் பாகிஸ்தான் நாட்டில் சுமார் 125 வருடமாக பல கூட்டணியில் பல பெயரில் இயங்கி வந்த பிரிட்டன் நாட்டின் Shell பெட்ரோலியம் நிறுவனம் அந்நாட்டு வர்த்தகத்திற்காக உருவாக்க நிறுவனத்தில் சுமார் 77 சதவீத பங்குகளை வைத்துள்ளது, இந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நிறுவனத்திற்கு பங்குகளை விற்பனை செய்ய ஜூன் 14 ஆம் தேதி கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக இன்று பாகிஸ்தான் நாட்டின் பங்குச்சந்தைக்கு சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. Shell Pakistan Limited நிறுவனம் பாகிஸ்தான் நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அரசு கடந்த சில வருடமாக கச்சா எண்ணெய் இறக்குமதியிலும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை தாறுமாறாக உயர்ந்தி வருகிறது. இதனால் மக்கள் எரிபொருள் பயன்பாட்டை பெரிய அளவில் குறைத்துள்ளனர், இதில் வருவாய் பாதிப்பை எதிர்கொண்ட Shell Pakistan Limited தனது 77.42 சதவீத பங்கு இருப்பையும், பாக் அரபு பைப்லைன் கம்பெனியில் இருக்கும் 26 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 125 வருடமாக இருக்கும் shell நிறுவனம் வெளியேற முக்கிய காரணம் பாகிஸ்தான் ராணுவம், பிரதமர் ஷெபாஷ் ஷரீப், நிதி அமைச்சர் இஷ்க் தார் ஆகியோர் தான் காரணம், பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் இவர்கள் தான் காரணம் என பாகிஸ்தான் மக்கள் டிவிட்டரில் காரசாரமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
இந்த நிலையில் சனா கான் என்பவர் டிவிட்டரில் இத்தகைய செய்தியை கேட்ட மிகவும் வருத்தமாக உள்ளது, தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூடிவதை பார்த்து வருகிறோம். தினமும் 100க் கணக்கான மக்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழக்கின்றனர். இது எங்கு போய் முடியுமோ..? என புலம்பி டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications