இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரசியல் பிரச்சனைக்கு மத்தியிலும் மோசமான நிலையை அந்நாட்டு மக்களும், வர்த்தக சந்தையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டின் வர்த்தகத்தை தொடர்வது பெரும் சிக்கல் இருப்பது மட்டும் அல்லாமல் வருமானம் பெரிய அளவில் சரிந்து வருகிறது.
இப்படியிருக்கையில் பாகிஸ்தான் நாட்டில் சுமார் 125 வருடமாக பல கூட்டணியில் பல பெயரில் இயங்கி வந்த பிரிட்டன் நாட்டின் Shell பெட்ரோலியம் நிறுவனம் அந்நாட்டு வர்த்தகத்திற்காக உருவாக்க நிறுவனத்தில் சுமார் 77 சதவீத பங்குகளை வைத்துள்ளது, இந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நிறுவனத்திற்கு பங்குகளை விற்பனை செய்ய ஜூன் 14 ஆம் தேதி கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக இன்று பாகிஸ்தான் நாட்டின் பங்குச்சந்தைக்கு சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. Shell Pakistan Limited நிறுவனம் பாகிஸ்தான் நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அரசு கடந்த சில வருடமாக கச்சா எண்ணெய் இறக்குமதியிலும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை தாறுமாறாக உயர்ந்தி வருகிறது. இதனால் மக்கள் எரிபொருள் பயன்பாட்டை பெரிய அளவில் குறைத்துள்ளனர், இதில் வருவாய் பாதிப்பை எதிர்கொண்ட Shell Pakistan Limited தனது 77.42 சதவீத பங்கு இருப்பையும், பாக் அரபு பைப்லைன் கம்பெனியில் இருக்கும் 26 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 125 வருடமாக இருக்கும் shell நிறுவனம் வெளியேற முக்கிய காரணம் பாகிஸ்தான் ராணுவம், பிரதமர் ஷெபாஷ் ஷரீப், நிதி அமைச்சர் இஷ்க் தார் ஆகியோர் தான் காரணம், பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் இவர்கள் தான் காரணம் என பாகிஸ்தான் மக்கள் டிவிட்டரில் காரசாரமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
இந்த நிலையில் சனா கான் என்பவர் டிவிட்டரில் இத்தகைய செய்தியை கேட்ட மிகவும் வருத்தமாக உள்ளது, தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூடிவதை பார்த்து வருகிறோம். தினமும் 100க் கணக்கான மக்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழக்கின்றனர். இது எங்கு போய் முடியுமோ..? என புலம்பி டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications