உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விநியோகத்தில் தடை எனப் பல பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்களுக்குக் கடுமையான நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன்
குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிகளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாங்க் ஆப் இங்கிலாந்து
ஆனால் பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்தில் பணவீக்கம் இலக்கை 2 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிரிட்டன் நாட்டில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர்.
45000 பவுண்ட்
பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் எம்ரீஸ் டிம்பர் அண்ட் பில்டர்ஸ் மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்குச் சுமார் 45000 பவுண்ட் அளவிலான பணத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
அந்த மனசு தான் சார் கடவுள்
தனது நிறுவன ஊழியர்கள் விலைவாசியைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காகத் தலா 750 பவுண்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 74000 ரூபாயை கொடுத்துள்ளார். ஊழியர்கள் கஷ்டப்படுவது எனக்குத் தெரியும், அவர்களின் சுமையை நிறுவனத்தின் வெற்றி மூலம் ஈடு செய்யும் சிறு முயற்சியை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
விலைவாசி, வரி, கட்டணம் உயர்வு
பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரத்தில் அரசு தனது வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதைத் தாண்டி விலை உயர்வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக மின்சாரக் கட்டணம், கவுன்சில் டாக்ஸ், குடிநீர் கட்டணம், பிராண்ட்பேன்ட், மொபைல் சேவை கட்டணம், வீட்டு வாடகை ஆகியவை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் நாட்டில் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
60 ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்த நிலையை உணர்ந்த எம்ரீஸ் டிம்பர் அண்ட் பில்டர்ஸ் மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 60 ஊழியர்களுக்கு 750 பவுண்ட் கொடுத்து உதவியுள்ளார். இந்தப் பணம் கட்டாயம் விலை உயர்வை சமாளிக்க உதவும் என இந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications