300 வருடத்தில் மோசமான பொருளாதாரச் சரிவு.. சோகத்தில் பிரிட்டன்..!

பிரிட்டன் பொருளாதாரம் கொரோனா பாதிப்பால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக 2வது முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள பிரிட்டன் அரசு கொரோனா பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதிகளவிலான நிதி சுமையை எதிர்கொண்டுள்ளது. இதைச் சமாளிக்கப் பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் பொருளாதாரம் தற்போது 300 வருடத்தில் மிகவும் மோசமான பொருளாதாரச் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் கடுமையான நிதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் தள்ளப்பட்டு உள்ளது.

 1709ஆம் ஆண்டு

1709ஆம் ஆண்டு

கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டு -11 சதவீதம் அளவிலான பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த -11 சதவீத பொருளாதார வீழ்ச்சியைப் பிரிட்டன் 1790ஆம் ஆண்டு ஸ்பானிஷ் போரின் போது பிரிட்டன் பொருளாதாரம் எதிர்கொண்ட மோசமான நிலையாகும்.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

இந்த 300 வருட மோசமான வீழ்ச்சியில் இருந்து பிரிட்டன் பொருளாதாரம் மீண்டு வர வேண்டும் என ரிஷி சுனக் தலைமையில் செலவுகள் கட்டுப்படுத்தும் முக்கியமான முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதற்குப் பல தரப்புகள் கடுமையான விமர்சனம் வைத்தாலும், நாட்டின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செலவுகளை அதிகளவில் குறைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கட்டுமானம்

கட்டுமானம்

இதேபோல் அதிகளவிலான வேலைவாய்ப்புகளைக் குறுகிய காலகட்டத்திற்கு உருவாக்க வேண்டும் எனப் பல கட்டுமான திட்டங்களைப் பிரிட்டன் முழுவதும் கொண்டு வர முடிவு செய்துள்ளார் ரிஷி சுனக்.

இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது மட்டும் அல்லாமல், குறைவான சம்பளத்தில் பணியாற்றும் பல கோடி பிரிட்டன் மக்களின் வருமானம் அதிகரிக்கும்.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

இதுகுறித்து பிரிட்டன் நிதியமைச்சர் கூறுகையில் பிரிட்டன் தற்போது Economic Emergency-யில் உள்ளது நுழைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் மக்களின் உயிரும், வாழ்வாதாரம் மட்டுமே தற்போது முதலும் முக்கிய இலக்காக உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து விதமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

19% ஜிடிபி

19% ஜிடிபி

இந்தக் கொரோனா காலத்தில் பிரிட்டன் அரசின் கடன் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் முடிவிற்குள் பிரிட்டன் நாட்டின் கடன் அளவு 526 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து கடன் அளவு நாட்டின் 19 சதவீத ஜிடிபி அளவிற்கு உயரும் எனத் தெரிவித்துள்ளார் ரிஷி சுனக்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிரிட்டன் அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் சுகாதாரத் துறை அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிரிட்டன் அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் சுகாதாரத் துறை அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+