2023 ஆம் நிதியாண்டில் துவக்கத்தில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளைக் குறைக்கும் விதமாகவும், அளவுக்கு அதிகமாகப் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்களைக் குறைக்கும் பொருட்டுக் கண்மூடித்தனமாகப் பணிநீக்கம் செய்தது.
மே மாதத்தில் இந்தப் பணிநீக்கம் குறைந்து, புதிய வேலைவாய்ப்புகள் மெல்ல மெல்ல உருவாகும் காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பியச் சந்தையில் பணவீக்கம் அதிகமானது. இதனால் சர்வதேசச் சந்தையில் மொத்தமாக டிமாண்ட் குறையத் துவங்கியது, இதன் எதிரொலியாக மீண்டும் பணிநீக்கம் பல துறையில் துவங்கியுள்ளது.

இதன் வாயிலாகப் பிரிட்டன் அவுட்சோர்சிங் நிறுவனமான கேபிடா (Capita) செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகளாவிய தனது வர்த்தகத்தில் சுமார் 900 ஊழியர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்திற்கு மறைமுகச் செயல்பாடுகள் மற்றும் மேல்நிலைகளில் பணியாற்று ஊழியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர். கேபிடா நிறுவனத்தின் இந்த முடிவு வாயிலாகப் பிரிட்டன், ஐரோப்பா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் அவுட்சோர்சிங் நிறுவனமான கேபிடா தனது சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 50,000 பேரைப் பணியமர்த்தியுள்ளது. இதில் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மூலம் 2 சதவீத மக்களை மட்டுமே பணிநீக்கம் செய்ய உள்ளது.
Capita நிறுவனம் பொது மற்றும் தனியார்த் துறைகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்தில் ஒரு சைபர் அட்டாக் நடந்தது, இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications