பிரிட்டன், ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து நாடு. ஆனால் BREXIT-க்கு பின்பு அதாவது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த நாள் முதல் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் பாதிக்கப்பட்டது.
இதில் இருந்து மீண்டு வரும் வேளையில் கொரோனா பாதிப்பால் பிரிட்டன் பொருளாதாகம் தத்தளித்த போது, பிரிட்டன் அரசியலில் பெரிய தடுமாற்றம் இதில் ரிஷி சுனக் வென்று அந்நாட்டின் அதிபரானார். அங்கிருந்து ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரமும் மாட்டிக்கொண்டது.

இந்த நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்தில் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் நாடாக ககுதப்படுகிறது. இதற்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வு துரத்தி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் தனியார் நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோய் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனைக்கு பின்பு தற்போது அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறுது. இதனால் பிரிட்டன் நாட்டின் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரிட்டன் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக தங்களுடைய பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்துவதற்கான பேங்க் ஆப் இங்கிலாந்து முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
எஸ்&பி குளோபலின் composite Purchasing Managers' Index செப்டம்பர் மாதத்தில் 48.6 ஆக இருந்து 46.8 ஆக சரிந்தது, இது ஜனவரி 2021 இல் இங்கிலாந்து லாக்டவுனில் இருந்தபோது உற்பத்தியில் கூர்மையான சரிவடைந்த போது பதிவான அளவீட்டுக்கு பின்பு மோசமான அளவை தற்போது பதிவாகியுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த PMI குறியீட்டை விடவும் மோசமான நிலையை செப்டம்பர் மாதம் பாதிவாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து அந்நாட்டின் பெண்ச்மார்க் வட்டி விகிதங்களை 5.25% என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு வருவதே அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது.
இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதார வல்லுனர்கள், அந்நாட்டில் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications