பிரிட்டனில் நிரந்தர குடியுரிமைக்கு இனி 20 ஆண்டுகள் வெயிட் பண்ணனும்.. அப்படினா இந்தியர்களின் நிலை..?

ஐக்கிய பேரரசு (UK) நாடு, கடந்த சுமார் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய குடியேற்ற கொள்கை சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. ஆளும் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் இந்த முடிவின்படி, சில சட்டப்பூர்வ குடியேறிகள் இனி பிரிட்டனில் நிரந்தரமாக குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

பொருளாதாரத்திற்குப் பங்களித்து, விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கும் நோக்கில் இந்தப் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நிரந்தர குடியுரிமைக்கு இனி 20 ஆண்டுகள் வெயிட் பண்ணனும்.. அப்படினா இந்தியர்களின் நிலை..?

குறைந்த ஊதியம் பெறுவோருக்குக் காத்திருப்பு நீட்டிப்பு : அரசாங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டனின் பொதுச் சேவைகளில் (சுகாதாரம், கல்வி போன்றவை) உள்ள அதிகப்படியான அழுத்தத்தை குறைக்கும் முயற்சியாகவே இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் புதிய விதிகள், 2021-ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டனுக்கு வந்த கிட்டத்தட்ட 2 மில்லியன் குடியேறிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் (குறைந்த ஊதியம்) : 2022 முதல் 2024 வரை சுகாதாரப் பராமரிப்பு விசாவில் வந்த சுமார் 6,16,000 ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு, நிரந்தரக் குடியுரிமைக்கான அடிப்படைத் தகுதிக் காலம் 15 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இந்த விசா வழிமுறை ஏற்கனவே முறைகேடுகள் காரணமாக மூடப்பட்டுவிட்டது.

அதிகபட்ச காத்திருப்பு : அரசின் சமூகச் சலுகைகளை நம்பி வாழும் குடியேறிகள், நிரந்தரக் குடியுரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது ஐரோப்பாவிலேயே மிக நீண்ட காலமாகும். சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு 30 ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பாதிப்பு : பிரிட்டனில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகம். அவர்களில் பலர் உயர் திறன் கொண்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். முந்தைய அரசாங்கத்தின் குடியேற்ற அளவுகள் காரணமாக, 2030 ஆம் ஆண்டுக்குள் 1.6 மில்லியன் குடியேறிகள் நிரந்தர குடியுரிமைக்கு தகுதி பெற இருந்த நிலையில், இந்தப் புதிய கொள்கை அவர்களைப் பாதிக்கும்.

புதிய விதிகளின்படி, சம்பளம் குறைவான பிரிவுகளில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள், தங்கள் நிரந்தர குடியுரிமைக்கான இலக்கை அடைய கூடுதல் ஆண்டுகளை செலவிட வேண்டியிருக்கும்.

யாருக்கு சலுகை..?: மருத்துவர்கள்/செவிலியர்கள் : தேசிய சுகாதாரச் சேவையில் (NHS) பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிக வருமானம் : அதிக சம்பளம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோர் போன்ற மிக சிறந்த சர்வதேச திறமையாளர்கள், வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெற விரைவாக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த சீர்திருத்தங்கள், பிரிட்டனின் குடியேற்ற முறையை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொருளாதாரத்திற்கு பங்களிப்பவர்களை மட்டும் அனுமதிக்கும் வகையிலும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளன. "இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேறுவது என்பது ஒரு உரிமை அல்ல, அது சம்பாதிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்பு சலுகை" என்று உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+