நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தினசரி அடிப்படையில் ஒரு மோசடி சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. அதுவும் சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் சாதாரணமாகிவிட்டது. என்னதான் காவல்துறையினர் எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. பெரும்பாலான மோசடி சம்பவங்கள் அனைத்தும் ஒரு அழைப்பின் மூலமாகத்தான் தொடர்கிறது. முதலில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களிடம் பேச்சு கொடுத்து பின்னர் தங்கள் வலையில் விழ வைக்கின்றனர். இது போன்ற மோசடி அழைப்பாளர்களுடன் பேசுவதற்காக டெய்சி என்கிற AI பாட்டியை UK நிறுவனம் உருவாக்கியுள்ளது
மோசடி தொடர்பான அழைப்புகளை தடுப்பதற்காக UK தொலைத்தொடர்பு நிறுவனமான O2 ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெய்ஸி என்ற பாட்டியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த AI பாட்டி மோசடி செய்பவர்களிடம் தொலைபேசியில் பேச்சுக் கொடுத்து போலியான குடும்ப கதைகள் மற்றும் நாடகங்கள் பற்றி பேசுவார். இதன் முக்கிய நோக்கமே மோசடி செய்பவர்களின் நேரத்தை வீணடிப்பது தான். அதோடு உண்மையான நபர்களை மோசடிக்கு பலியாகாமல் பாதுகாப்பதற்காக இந்த AI பாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்களுக்கு எதிராக O2 நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிகரித்து வரும் மோசடி அழைப்புகளுக்கு எதிராக AI பாட்டி தொடர்ந்து பேச்சு கொடுக்கும். AI பாட்டி சாதாரண சேட் பாட் கிடையாது. மனிதனைப் போலவே பேச்சு கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் மேம்படுத்தப்பட்ட AI. மோசடிக்காரர்கள் பேசுவதற்கு ஏற்ப இந்த AI பாட்டி அவர்களுக்கு பதில் அளிக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவர் AI என்பது பேசுபவருக்கு தெரியாது.
டெய்ஸி உருவாக்கப்பட்டது ஏன்?: மோசடியில் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் 7 பேர் இந்த சம்பவத்தை நிகழ்த்திய மோசடிக்காரர்களை பழிவாங்க விரும்புகின்றனர். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நேரத்தை அதற்காக பயன்படுத்த விரும்புவதில்லை. இதன் காரணமாகத்தான் டெய்சி உருவாக்கப்பட்டது. ஏமாற்றும் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்காகவும், மோசடி செய்பவர்களை 40 நிமிடங்கள் வரை பேச வைத்து அவர்களுடைய நேரத்தை வீணடிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. டெய்சி பாட்டி மோசடி செய்பவர்களை விரக்தி அடையச் செய்வது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் ஒரு நபரை ஏமாற்றுவதையும் தடுக்கிறது.

O2 நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான மோசடி அழைப்புகளை பிளாக் செய்கிறது. அதோடு இந்த மோசடிகளை தடுப்பதற்காக ஒரு தேசிய பணி குழுவையும் அமைத்துள்ளது. இனிவரும் காலங்களில் AI பாட்டி மோசடிக்காரர்களை ஓட ஓட விரட்டுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. UK மட்டுமல்லாமல் உலகெங்கிலும் டெய்சி பாட்டியை கொண்டு வந்தால் இனி வரும் காலங்களில் எந்தவித நிதி இழப்பும் ஏற்படாமல் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications