ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் குறையாத நிலையில் உக்ரைன் நாட்டின் வர்த்தகமும், பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில் விமான என்ஜின்கள் மற்றும் தொழில்துறை டர்பைன்-களை உற்பத்தி நிறுவனமான மோரர் சிச்-ன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ் சனிக்கிழமையன்று உக்ரைன் ராணுவ அதிகாரிகளால் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளது.
இது உக்ரைன் தொழிற்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்
மோரர் சிச்-ன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ் வயது 83. இவர் உக்ரைன் நாட்டின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் அதிகரித்து வர பலவேறு நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்தது.
ரஷ்யா
இதில் முக்கியமாக ரஷ்யாவுக்கும், ரஷ்யாவின் போருக்கு ஆதரவாக இருக்கும் பல உக்ரைனியர்களைக் கட்டம் கட்டி கண்காணித்து வந்தது. அப்படி உக்ரைன் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டிற்குள் இருந்த அவர் தான் மோரர் சிச்-ன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்.
இன்ஜின்
ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலும், உக்ரைன் மற்றும் உலக நாடுகளின் தடையை மீறி ரஷ்ய ராணுவத்திற்கு இன்ஜின் வழங்கிய காரணத்திற்காகவும், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கைது
உக்ரைன் நாட்டின் Zaporizhzhia நகரத்தில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்த 83 வயதான வியாசெஸ்லாவ் போகஸ்லேவ், ராணுவ அதிகாரிகள் தனது வீட்டிற்குள் சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில், ராணுவ அதிகாரிகள் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.
விக்டர் மெட்வெட்சுக்
வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்-க்கு முன்பு அரசியல்வாதியும் தொழிலதிபருமான விக்டர் மெட்வெட்சுக் (Viktor Medvedchuk) இதேபோல் ரஷ்ய தொடர்பு இருப்பதாகக் கூறி மாஸ்கோவிற்குத் தப்பிச் செல்ல முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications