ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வலுவான தலைமையின் கீழ் இணைந்து வேலை செய்ய தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, முதல் கட்டமாக கைதிகளை விடுவிப்பது, வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல் உள்ளிட்டவற்றை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "வெள்ளை மாளிகையில் நடந்த எங்கள் சந்திப்பில் ஏற்பட்ட வாக்குவாதம் வருந்தத்தக்கது என்று கூறினார். உக்ரைனின் அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜெலென்ஸ்கி, தனது இராணுவத்திற்கான ஜாவலின் டாங்கி ஏவுகணைகளை வழங்கியதற்காக டிரம்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டிய நேரம் இது என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

நாங்கள் யாரும் முடிவில்லாத போரை விரும்பவில்லை. உக்ரைன், நீடித்த அமைதியை நெருக்கமாகக் கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது. உக்ரைனியர்களைவிட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. நீடித்த அமைதியைப் பெற அதிபர் ட்ரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நானும் எனது குழுவும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை குறைக்கும் வகையில், ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான பிற தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன்படி, முதல் கட்டமாக கைதிகளை விடுவிப்பது மற்றும் வான்வழி தாக்குதல் நிறுத்தம், ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், எரிசக்தி மீதான குண்டு வீச்சுகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இதேபோல் கடலில் உடனடி அமைதியை ஏற்படுத்த வேண்டும். எனவே, ரஷ்யாவும் இதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படியென்றால், அடுத்த கட்டங்கள் அனைத்தையும் மிக வேகமாகக் கடந்து, வலுவான இறுதி ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க உதவிக்கு நன்றி: உக்ரைனின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா எவ்வளவு உதவி செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதனை மதிக்கிறோம். அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் வாஷிங்டனில் நடந்த எங்கள் சந்திப்பு, நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. இப்படி நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அதனை சரி வேண்டிய நேரமிது. எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு தகவல்தொடர்பு ஆக்கபூர்வமானதாக இருக்க விரும்புகிறோம். எனவே, உக்ரைன் எந்த நேரத்திலும் கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்யும் ஒரு படியாகவே நாங்கள் அதைப் பார்க்கிறோம். அது எங்களுக்கு பலன் தரும் என நம்புகிறோம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications