2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 6.3 சதவீதமாக குறைத்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து இருந்தாலும் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்திய அரசு செலவினங்களை அதிகரித்திருப்பதும் மக்களிடையே நுகரும் போக்கு அதிகரித்து இருப்பதும் இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே வைத்திருக்கும் என ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஜனவரியில் ஐநா வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என கூறி இருந்தது. தற்போது அதனை 6.3 சதவீதம் என குறைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கு 6.4 சதவீதமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவக்கூடிய வர்த்தக மோதல்கள் உள்ளிட்டவை காரணமாக ஐநா இந்தியாவுக்கான தன்னுடைய பொருளாதார வளர்ச்சி தொடர்பான கணிப்பை குறைத்து இருக்கிறது. அப்படி இருந்தாலும் இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக நீடிக்கிறது என்ற ஒரு நம்பிக்கையையும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரிவிதிப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் சிறிது பாதிப்பு ஏற்படலாம் என்ற ஒரு எச்சரிக்கையும் ஐநா தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை என்பது சீராக இருப்பதாகவும் , இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் பாலின பாகுபாடு அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கவலை தங்களுக்கு இருப்பதாகவும் ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.
பணவீக்க அடிப்படையில் பார்க்கும்போது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் பணவீக்க விகிதம் 4.3 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் 4.9 சதவீதமாக பணவீக்கம் இருந்தது. சர்வதேச அளவில் பார்க்கும்போது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது 2025 ஆம் ஆண்டில் 2.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கூறி இருக்கிறது 2024 ஆம் ஆண்டில் இது 2.9 சதவீதமாக இருந்தது.
பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் கூட இந்த ஆண்டு சற்றே மந்த நிலை ஏற்படும் என ஐநா தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. வர்த்தக மோதல்கள் முடிவுக்கு வந்து சர்வதேச பொருளாதாரம் சீரடையும் போது உலக பொருளாதாரமும் சீரடையும் என கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications