சென்னை: பொருளாதார மந்தநிலைகள், சந்தை ஏற்ற இறக்கங்கள், புவிசார் பதட்டங்கள் ஆகியவற்றின் போது தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில், தங்கப் பத்திரங்கள் (SGBs) ஒரு புதிய முதலீட்டு திட்டமாக மாறியுள்ளன. SGBகளில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டாளர்கள் சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது நல்லது. அவற்றைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.
தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Plan) என்றால் என்ன?: SGB என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தங்கப் பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் அரசாங்கப் பத்திரங்கள். அவை கிராம் தங்கத்தில் அளவிடப்படும் அரசாங்கப் பாத்திரங்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டில் தங்கத்தை பணம் ஆக்குதல் திட்டத்தின் கீழ், இந்த தங்கப் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் நீங்கள் அவற்றை 1 கிராம் முதல் வாங்கலாம்.

ஒரு ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு நடத்தும் ஏலம் மூலமாக, நீங்கள் SGB களைப் பெறலாம். அவற்றை வாங்க, உங்களிடம் பான் கார்டு இருக்க வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பங்கு தரகு நிறுவனங்களில் இருந்து SGBகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம்.
தகுதி: அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தனி நபர்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், HUFகள் என யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்ய முடியும். தனிநபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரையில் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டு குடும்பமாக இருந்தால், அவர்களும் ஒரு கிராம் முதல் 4 கிலோ SGBகள் வரை முதலீடு செய்யலாம் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஒரு கிராம் முதல் 20 கிலோ SGBகள் வரை முதலீடு செய்ய முடியும்.
இந்தப் பாத்திரத்தில் முதலீடு செய்வதன் கால அளவு 8 ஆண்டுகள். இருந்தாலும் உங்களுக்கு தேவைப்பட்டால் 5, 6, 7 ஆண்டுகளில், இந்த திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
வரி விவரங்கள்: இந்த பத்திரங்கள் உங்களுக்கு 2.5% வட்டியை செலுத்துகின்றன, மேலும் நீங்கள் வருடத்திற்கு இரண்டு முறை பணம் பெறுவீர்கள். இந்த வட்டி விகிதம் முதலீட்டு ஆண்டைப் பொறுத்து மாறுபடலாம். இந்த பத்திரங்களிலிருந்து நீங்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரிக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஆனால், அவை முதிர்ச்சியடையும் போது நீங்கள் பெறும் எந்த லாபத்திற்கும் வரி இல்லை.
நீங்கள் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெறும்போது, அந்தத் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு உள்ள, 999 தூய்மையான தங்கத்தின் சராசரி இறுதி விலையைப் பயன்படுத்தி, இந்திய ரூபாயில் மீட்பு விலை கணக்கிடப்படுகிறது என்று இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications