ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது, குறிப்பாக ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாக இதன் அளவீடு 5.1 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நகரபுறத்தில் இதன் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது, ஒரு வாரத்திற்கு முன்பு நகரபுறத்தில் வேலைவாய்ப்பின்மை அளவு 7.94 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் 8.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஊரக பகுதிகளை ஒப்பிடுகையில் நகரபுறத்தில் இதன் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது, ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்துள்ள வேலையில் வேலைவாய்ப்பின்மை அளவீடு உயர்ந்துள்ளது, அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை என்பது 7.14 சதவீதமாக உள்ளது, இதன் கடந்த வாரம் 5.98 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.