தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதியிலிருந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்ங்கள் நடைபெற்ற வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பொறுத்தவரை , அரசின் சேவைகள் மக்களை தேடி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டது.

வழக்கமாக ஒரு அரசு வேலையை முடிக்க நாம் பல நாட்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டும். ஆனால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் இருப்பார்கள் என்பதால் மக்களின் தங்களின் பெரும்பாலான வேலைகளை ஒரே இடத்தில் ஒரே நாளில் முடித்து கொண்டார்கள்.
ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடந்து முடிந்து விட்டன குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வரும் 14ம் தேதி வரை முகாம் நடைபெற இருக்கிறது. எனவே பின்வரும் மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர் ,திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர் ,மதுரை ,சேலம் ,திருச்சி ,திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் , திருவாரூர் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் வரும் 14ஆம் தேதி வரை அதாவது வரும் வெள்ளிக்கிழமை வரை மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள் .

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலான பல்வேறு அரசு சேவைகளையும் பெற முடியும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை , சுய தொழில் கடன் உதவி போன்றவற்றுக்கும் இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கும் இந்த முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
தங்கம் விலை மேலும் குறையுமா? - என்ன நடந்தால் விலை குறையும்?
வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓபிசி சான்றிதழ், கைம்பெண் சான்றிதழ், பட்டாவில் பெயர் மாற்றம், ஆதார் கார்டில் திருத்தம் போன்றவற்றுக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும். முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவி தொகை திட்டங்களை பெறுவதற்கும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே உங்களுக்கு இந்த சேவைகள் தேவைப்படுகின்றன, குறிப்பாக மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பவர்கள் இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
More From GoodReturns

நம்ம கடலூர் சில்வர் கடற்கரையா இது? அடையாளமே தெரியாம மாறி போச்சே!! மக்கள் இனிமே படையெடுக்க போறாங்க!!

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி? இந்த ஒரு நம்பர் கையில இருந்தா போதும்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?



Click it and Unblock the Notifications