கொரோனா காலத்தில் இருந்தே பெரு நிறுவனங்களில் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே பெரு நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த பட்டியலில் யுனிலிவர் நிறுவனமும் இணைந்துள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நுகர்வோர் உற்பத்தி நிறுவனமான யுனிலிவர், உலகம் முழுவதும் பல கிளைகளுடன், பல பெயர்களில் இயங்கி வருகிறது, இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பெயரில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் அதிகம். இந்நிலையில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள யுனிலிவர் நிறுவனம், ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் ஐஸ்கிரீம் யூனிட்டை தனி வணிகமாக பிரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது யுனிலிவர் நிறுவனத்தின் கீழ் மேக்னம் மற்றும் பென் & ஜெர்ரி பிராண்டுகளின் பெயரில் ஐஸ்கிரீம் யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. ஐஸ்கிரீம் யூனிட்டை தனியாக பிரிப்பதன் மூலம் சுமார் 7,500 பணியாளர்கள் வேலைகளை இழக்க உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 209 நிறுவனங்கள் சுமார் 50,000 மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. நிறுவனத்தை மறுசீரமைப்பது, சிக்கன நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்த பணி நீக்க அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் யுனிலிவர் நிறுவனம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர்களை வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யுனிலிவரில் மொத்தமாக 1,28,000 பேர் வேலை செய்கின்றனர். தற்போது பணி நீக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 5.9% பேர் இதனால் பாதிக்கப்பட உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
யுனிலிவர் நிறுவனம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் ஐஸ்கிரீம் தொழில் என்பது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது.
எனவே அதனை தனி நிறுவனமாக பிரிக்கிறோம் என யுனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இந்தியாவிலும் இந்த பிராண்டின் கீழ் செயல்படும் நிறுவனங்களை மாற்றி அமைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என ஹிந்துஸ்தான் யுனிலிவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் 2023 ஆம் நிதி ஆண்டில் 59,144 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ஐஸ்கிரீம் யூனிட்டுகள் மூலம் 3% வருவாய் கிடைத்துள்ளது. உலக அளவில் முதல் 10 இடங்களில் உள்ள ஐஸ்கிரீம் பிராண்டுகளில் 5 பிராண்டுகள் யுனிலிவருக்கு சொந்தமானவை.
இந்தியாவில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திற்கு ஐஸ்கிரீம் யூனிட்டுகள் மூலம் 3% வர்த்தகம் தான் நடைபெறுகிறது. ஆனால் தாய் நிறுவனமான யுனிலிவருக்கு இது 13.15% ஆகும்.
இந்தியாவில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் கீழ் குவாலிட்டி வால்ஸ், கார்னெட்டோ, மேக்னம் ஆகிய பிராண்டுகளின் பெயர்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2023 ஆம் நிதியாண்டில் ஐஸ்கிரீம் யூனிட்கள் மூலம் 14,876 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications