இந்தியாவின் பொதுத்துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் , முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் எழுதிய புத்தகத்தின் 2 லட்சம் பிரதிகளை 7.25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி அவருடைய புத்தகம் வெளியாவதற்கு முன்பே யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளுக்கு ஆர்டர் வழங்கியதாம். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ndia@100: Envisioning Tomorrow's Economic Powerhouse என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புத்தகம் வெளியானது.

இந்த புத்தகத்தின் 2 லட்சம் பிரதிகளை 7.25 கோடி ரூபாய்க்கு வாங்கி யூனியன் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நூலகங்களுக்கு விநியோகம் செய்துள்ளது. புத்தகம் வெளியாவதற்கு முன்னரே யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்ட ரூபா நிறுவனத்திற்கு 50 சதவீத தொகையை அட்வான்ஸாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பிரமணியன் கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஐஎம்எஃபின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். அவருடைய மூன்றாண்டு பதவிக்காலம் நவம்பர் 1, 2022 இல் தொடங்கியது. பதவிக்காலம் வரும் நவம்பர் உடன் முடிவடைய இருந்த நிலையில் பதவி முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு அவரை திரும்ப பெற்றுக் கொண்டது.
அவர் தன்னுடைய புத்தகத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக சில முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் தான் அவருடைய புத்தகத்தை யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளை வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
யூனியன் வங்கியின் சப்போர்ட் சர்வீஸ் துறை சார்பாக அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் இந்த புத்தகத்தை வாங்கி விநியோகம் செய்வது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டதாம். இதன்படி 1 லட்சத்து 89 ஆயிரத்து 450 பிரதிகளை வாங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பேப்பர் பேக் புத்தகத்தை 350 ரூபாய் என ஒவ்வொரு மண்டல அலுவலகமும் தலா 10,525 புத்தகங்களை வாங்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல ஹார்ட் கவர் புத்தகத்தை ஒவ்வொரு மண்டலமும் 10,422 பிரதிகள் வாங்க வேண்டும் என அதன் விலை 597 ரூபாயாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.25 கோடி ரூபாய்க்கு யூனியன் வங்கி புத்தகத்தை வாங்கி இருக்கிறது.
இந்த புத்தகத்தின் ஆங்கில பிரதி 10000 பிரதிகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கும் நிலையில் யூனியன் வங்கி 2 லட்சம் புத்தகங்களை வாங்கி தேவையற்ற செலவினை செய்திருப்பதாக வங்கி ஊழியர்கள் சார்பாக மேலாண் இயக்குனர் மணிமேகலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சப்போர்ட் சர்வீஸ் பிரிவு தலைவராக இருந்த கிரிஜா மிஸ்ராவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இருந்தாலும் இந்த விவகாரத்தில் வேறு சிலரின் தலையீடும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications