ரூ.7.25 கோடிக்கு புத்தகத்தை வாங்கி சர்ச்சையில் சிக்கிய யூனியன் வங்கி.. யாருடைய புக் தெரியுமா..?

இந்தியாவின் பொதுத்துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் , முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் எழுதிய புத்தகத்தின் 2 லட்சம் பிரதிகளை 7.25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி அவருடைய புத்தகம் வெளியாவதற்கு முன்பே யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளுக்கு ஆர்டர் வழங்கியதாம். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ndia@100: Envisioning Tomorrow's Economic Powerhouse என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புத்தகம் வெளியானது.

ரூ.7.25 கோடிக்கு புத்தகத்தை வாங்கி சர்ச்சையில் சிக்கிய யூனியன் வங்கி.. யாருடைய புக் தெரியுமா..?

இந்த புத்தகத்தின் 2 லட்சம் பிரதிகளை 7.25 கோடி ரூபாய்க்கு வாங்கி யூனியன் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நூலகங்களுக்கு விநியோகம் செய்துள்ளது. புத்தகம் வெளியாவதற்கு முன்னரே யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்ட ரூபா நிறுவனத்திற்கு 50 சதவீத தொகையை அட்வான்ஸாக வழங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பிரமணியன் கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஐஎம்எஃபின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். அவருடைய மூன்றாண்டு பதவிக்காலம் நவம்பர் 1, 2022 இல் தொடங்கியது. பதவிக்காலம் வரும் நவம்பர் உடன் முடிவடைய இருந்த நிலையில் பதவி முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு அவரை திரும்ப பெற்றுக் கொண்டது.

அவர் தன்னுடைய புத்தகத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக சில முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் தான் அவருடைய புத்தகத்தை யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளை வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.

யூனியன் வங்கியின் சப்போர்ட் சர்வீஸ் துறை சார்பாக அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் இந்த புத்தகத்தை வாங்கி விநியோகம் செய்வது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டதாம். இதன்படி 1 லட்சத்து 89 ஆயிரத்து 450 பிரதிகளை வாங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பேப்பர் பேக் புத்தகத்தை 350 ரூபாய் என ஒவ்வொரு மண்டல அலுவலகமும் தலா 10,525 புத்தகங்களை வாங்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல ஹார்ட் கவர் புத்தகத்தை ஒவ்வொரு மண்டலமும் 10,422 பிரதிகள் வாங்க வேண்டும் என அதன் விலை 597 ரூபாயாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.25 கோடி ரூபாய்க்கு யூனியன் வங்கி புத்தகத்தை வாங்கி இருக்கிறது.

இந்த புத்தகத்தின் ஆங்கில பிரதி 10000 பிரதிகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கும் நிலையில் யூனியன் வங்கி 2 லட்சம் புத்தகங்களை வாங்கி தேவையற்ற செலவினை செய்திருப்பதாக வங்கி ஊழியர்கள் சார்பாக மேலாண் இயக்குனர் மணிமேகலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சப்போர்ட் சர்வீஸ் பிரிவு தலைவராக இருந்த கிரிஜா மிஸ்ராவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இருந்தாலும் இந்த விவகாரத்தில் வேறு சிலரின் தலையீடும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+