மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரிச் சலுகை மற்றும் தளர்வுகள் மூலம் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்குச் சாதமாக மாறியுள்ளது.
தனி நபர் வருமான வரிப் பிரிவில் மட்டும் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் சுமார் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமான இதேவேளையில் அதிகப் பலன் அளிக்கக் கூடிய ஒரு அறிவிப்பைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
லீவ் என்கேஷ்மெனட்
லீவ் என்கேஷ்மெனட் கீழ் அரசு வேலையில் இல்லாத ஊழியர்கள் ஓய்வு பெறும் போது 3 லட்சம் வரையிலான தொகைக்கு மட்டுமே வருமான வரி விலக்கு இருக்கிறது. இந்த லீவ் என்கேஷ்மெனட் வரம்பை 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம்
லீவ் என்கேஷ்மெனட் வருமான வரி விலக்கு அளவீட்டை 2002க்கு பின்பு மாறாமல் அப்படியே இருக்கிறது. அப்போது அரசு ஊழியர்களின் அதிகப்படியான அடிப்படை சம்பள அளவான 30000 ரூபாய் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
25 லட்சம் ரூபாய்
இந்த நிலையில் தற்போதைய அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பள உயர்வைப் பொருத்து லீவ் என்கேஷ்மெனட் வரம்பை 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தப் புதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
லீவ் என்கேஷ்மெனட் என்றால் என்ன..?
லீவ் என்கேஷ்மென்ட் என்பது ஒரு பணியாளர் தனது பணி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளாத லீவ் அதாவது விடுமுறைக்கு, ஈடாக ஒரு ஊழியர் பெறும் பணம். பணவீக்க பாதிப்பால் தத்தளிக்கும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்த நிலையில் லீவ் என்கேஷ்மென்ட் வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தியுள்ளது.
ஓய்வு அல்லது ராஜினாமா
ஒரு பணியாளர் தனது பணி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளாத லீவ் அனைத்திற்கும் பணியில் இருந்து ஓய்வு பெறும் போதோ அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும் போதோ கிடைக்கும். இப்பிரிவில் கிடைக்கும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 10(10AA) கீழ் 300000 ரூபாய் வரையில் வரி தள்ளுபடியை 31 மே 2002 முதல் அளிக்கப்பட்டு வந்தது.
வரி விலக்கு
இதன் மூலம் நீங்கள் ஆபீஸ்-க்கு லீவ் எடுக்காமல், லீவ் பேலென்ஸ்-ஐ சேர்த்து வைத்திருந்தால் மிகப்பெரிய தொகையை ஓய்வு பெறும் போது வரி விலக்குடன் பெற முடியும். அதுவும் 25 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை வரி இல்லாமல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸ் ரிபேட்
லீவ் எண்கேஷ்மென்ட் தாண்டி பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்த வருமான வரி விதிப்பில் பெரும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 5 லட்சமாக இருந்த டாக்ஸ் ரிபேட் 7 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications