மத்திய நிதி அமைச்சகம், 2026-27 யூனியன் பட்ஜெட் தயாரிப்பின் இறுதி கட்டத்தை முன்னிட்டு, தனது பாரம்பரிய அல்வா வழங்கும் விழாவை இன்று நடத்துகிறது. இது இந்தியாவின் வருடாந்திர பட்ஜெட்டில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் முக்கியமான சடங்காகும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த அதிகாரிகள் மற்றும் பட்ஜெட் ஊழியர்களுடன் இதில் பங்கேற்பார். பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய சடங்கு இது.

அல்வா விழாவைத் தொடர்ந்து, 2026 யூனியன் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட 60-70 அதிகாரிகள், "லாக்-இன்" எனப்படும் தனிமைக் காலத்திற்குச் செல்வர். பட்ஜெட் தகவல்கள் கசிவதைத் தடுக்க, வெளித்தொடர்பு தடை செய்யப்படும். அதாவது நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை இந்த அதிகாரிகள் அலுவலகத்திலேயே தங்கி இருப்பார்கள். யாருடனும் இவர்களால் தொடர்பு கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு நிதியமைச்சகம் கர்தவ்ய பவனுக்கு மாற்றப்பட்டபோதும், தளவாட சிக்கல்கள் காரணமாக 2026-27 பட்ஜெட் வடக்குப் பகுதி அச்சகத்திலேயே அச்சிடப்படும். யூனியன் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப்படும் அல்வா விழா, ஒரு பாரம்பரிய நிகழ்வு. இதில் நிதியமைச்சர் பெரிய பாத்திரத்தில் அல்வாவை கிளறி, அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிப்பார்.
இது பட்ஜெட் "லாக்-இன்" காலத்தின் தொடக்கம். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னரே முடிவுக்கு வரும். ஊழியர்களின் உழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், முக்கிய நிகழ்வுகளை இனிப்புடன் தொடங்கும் இந்திய பாரம்பரியத்தின்படி மங்களகரமானதாகவும் இது அமைகிறது.
2021 முதல் காகிதமற்ற பட்ஜெட் நடைமுறைக்கு வந்ததால், இந்த "லாக்-இன்" காலம் குறைந்துள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தகவலின்படி, பட்ஜெட் ஆவணங்கள் தற்போது வடக்குப் பகுதி அரசு அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன. முன்னதாக ராஷ்டிரபதி பவனில் அச்சிடப்பட்டது, ஆனால் கசிவுகள் காரணமாக, அச்சிடும் பணி 1950 இல் மின்டோ சாலைக்கும், பின்னர் 1980 இல் வடக்குப் பகுதிக்கும் மாற்றப்பட்டது.
"லாக்-இன்" காலத்தில் அனைத்து ஊழியர்களும் வடக்குப் பகுதியிலேயே தங்க வேண்டும். பட்ஜெட் ரகசியத்தன்மையை உறுதி செய்ய குடும்பத்தினருடன் கூட அவர்களுக்குத் தொடர்பின்றி இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications