தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பிரத்தியேக கவனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
எனவே ஒட்டுமொத்த தமிழ்நாடுமே பட்ஜெட்டில் நம் மாநிலத்திற்கு சிறப்பு கவனிப்பு இருக்கும் என எதிர்பார்த்தது. குறிப்பாக நிதி அமைச்சர் இன்று காஞ்சிபுரம் பட்டுப்புடவை உடுத்தி வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். எனவே தமிழ்நாட்டுக்கு மாஸ் அறிவிப்புகள் என அனைவரும் பேச தொடங்கினர். ஆனால் எதிர்பார்த்த அளவு பெரிய அறிவிப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

தமிழ் நாட்டுக்காக பட்ஜெட்டில் வெளியான முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது நாம் விரிவாக பார்க்கலாம். பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான பிரத்தியேக Rare Earth Corridors எனப்படும் தொழில் வழித்தடம் தொடங்கப்படும் என அறிவித்தார். அதாவது கனிமங்கள் நிறைந்த ஒடிசா ,கேரளா ,ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரத்தியேகமான அரிய வகை கனிமங்களுக்கான தொழில் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அரிய வகை கனிம வளங்களை தோண்டி எடுப்பது, பிராசசிங் செய்வது மற்றும் ஆய்வு, உற்பத்தி பணிகள் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும் என தெரிவித்தார்.
அடுத்ததாக ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என கூறினார். தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நாடுமுழுவது உள்ள 15 தொல்லியல் இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொல்லியல் இடம் தான் ஆதிச்சநல்லூர்.

நாடு முழுவதும் மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.அடுத்ததாக தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் தேங்காய் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றார். அந்த வகையில் தமிழகம் இதில் முன்னிலையில் இருப்பதால் தேங்காய் உற்பத்தி திட்டத்தில் தமிழ்நாடு பலன் பெறும்.
அடுத்ததாக நாடு முழுவதும் ஏழு நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். இதில் சென்னை - பெங்களூர் , சென்னை - ஹைதராபாத் வழித்தடங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே சென்னையில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியிருக்கிறது.
நாடு முழுவதுமே மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும் என கூறினார். இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்பதால் இங்கேயும் அனைத்து மாவட்டங்களிலும் விடுதிகள் வர இருக்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications