டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு 1.5 லட்சம் கோடி அளவிலான சலுகைகள் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சலுகைகள் நிறுவனங்களின் உற்பத்தி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் குறித்து மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு இதன் மூலம் சுயசார்பு இந்தியாவை உறுதிபடுத்த முடியும். இதனை கருத்தில் கொண்டு தான் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மருத்துவம், மின்னணு, ஒயிட் கூட்ஸ், ஸ்பெஷலைஸ்டு ஸ்டீல், ஆட்டோமொபைல் துறை, தொலைத் தொடர்பு துறை, டெக்ஸ்டைல்ஸ், உணவு பொருட்கள் மற்றும் சோலார் பொரூட்கள் உற்பத்தி, மொபைல் பேட்டரி உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறைகளை ஊக்கப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஊக்கத் தொகையானது சோலார் மின் உற்பத்தி துறைக்கு 4,500 கோடி ரூபாயும், இரும்பு உற்பத்தி துறைக்கு 6,322 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறைக்கு 57,042 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும், ஜவுளித் துறைக்கு 10,863 கோடி ரூபாயும், உணவு பொருட்கள் துறைக்கு10,900 கோடி ரூபாயும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதலீடுகள் வரத்து அதிகரிக்கும். இது சுயசார்பு இந்தியா திட்டத்தினை மேம்படுத்தும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் உற்பத்தி விகிதம் அதிகரிக்கும். தொழில்துறையும் மேம்படும். இதன் மூலம் ஏற்றுமதியினையும் அதிகரிக்க முடியும். ஆக நாம் இறக்குமதியினை மட்டும் நம்பாமல், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியினை இதன் மூலம் அதிகரிக்க முடியும். ஆக மொத்தத்தில் இந்தியா யாரையும் நம்பாமல் தனித்து செய்பட முடியும். இது இந்தியாவினை சுயசார்பு இந்தியாவாக மாற்ற வழிவகுக்கும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.