டெல்லி: இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இயற்கை வேளாண்மை இயக்கம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 25ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதில் முக்கியமானது இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 2481 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய இந்த திட்டம் உதவும்.

பான் 2.0: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை பொது வணிக அடையாள காட்டியாக மாற்ற வசதியாக பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 1435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தா: நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்காக ஒரே நாடு ஒரே சந்தா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த திட்டத்திற்கு 6000 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 6300-க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வு கட்டுரைகளை எளிதாக அணுக முடியும்.
அடல் கண்டுபிடிப்பு இயக்கம்: நிதி ஆயோக் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட அடல் கண்டுபிடிப்பு இயக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் இதற்காக 2750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ரயில் திட்டங்கள்: 7,927 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ரயில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பயன் தரும் வகையில் இந்த மூன்று ரயில் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
நீர் மின் திட்டங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் 3,689 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நீர் மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications