டெல்லி: உலகம் முழுவதும் தற்போது செமி கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. செமி கண்டக்டர் துறையில் முன்னிலை நாடாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா இந்த துறை சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் புதிதாக நான்கு இடங்களில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.
அமைச்சரவை கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.’

ஏற்கனவே 6 செமி கண்டக்டர் ஆலைகள்: ஏற்கனவே இந்தியாவில் குஜராத் , அசாம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆறு செமி கண்டக்டர் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன விரைவில் மேட் இன் இந்தியா சிப்கள் இந்த ஆலைகளில் இருந்து வெளியாக போகின்றன என குறிப்பிட்டார். மத்திய அரசு செமி கண்டக்டர் துறையை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது என கூறி இருக்கும் அவர் இந்தியாவில் மேலும் நான்கு இடங்களில் செமி கண்டக்டர் ஆலைகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி தந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

புதிதாக 4 ஆலைகள்: இதன்படி ரூ.4594 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் கூடுதலாக நாலு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட இருக்கின்றன. ஒடிசா மாநிலத்தில் இரண்டு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்படும் எனவும் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லக்னோ மெட்ரோ விரிவாக்கம்: அதேபோல உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் தற்போது செயல்பட்டு வரக்கூடிய மெட்ரோ சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது . இதன்படி லக்னோ மெட்ரோ சேவையானது 5801 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. லக்னோ நகரத்தின் வளர்ச்சி மற்றும் அதற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்திற்கு அனுமதி தரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
புதிய ஐஐஎம்: இதேபோல கவுஹாத்தியில் புதிதாக ஒரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தை கட்டமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி தந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் தற்போது ஷில்லாங்கில் ஒரு ஐஐஎம் கல்வி நிறுவனம் இருக்கிறது, இரண்டாவது ஐஐஎம் கவுஹாத்தியில் அமைய இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது டேட்டோ நீர்மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த 8,145 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications