நொய்டா: உத்திரபிரதேச மாநில அரசு முதன்முறையாக செமிகண்டக்டர்களுக்கான தொழில் பூங்காவை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. நொய்டா விமான நிலையத்திற்கு அருகில் இந்த தொழில் பூங்கா அமையும் என சொல்லப்படுகிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அரசு தங்களுடைய மாநிலத்தில் முதன்முறையாக செமிகண்டக்டர் தொழில் பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளது. இது நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஜேவர் பகுதியில் அமைகிறது.

யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகிலேயே இந்த தொழில் பூங்கா அமைய இருப்பது இதன் மற்றொரு சிறப்பு ஆகும். நொய்டாவின் செக்டார் 10 பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் கிளஸ்டர் அமைக்கப்படும் என்றும், செக்டார் 28 பகுதியில் 125 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் கிளஸ்டர் அமைக்கப்படும் என்றும் உத்தரபிரதேச மாநில அரசு கூறுகிறது.
இதன் மூலம் பல்வேறு செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களும் உத்தரபிரதேசத்தை நோக்கி வருவார்கள், மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இதற்காகவே யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு செமிகண்டக்டர் கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் செமிகண்டக்டர் பிரிவில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .குறிப்பாக மூலதனத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வரிகளும் ரத்து செய்யப்படும் என உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது. இந்த செமிகண்டக்டர் பூங்காவில் 8 MLD நீர் சுத்திகரிப்பு நிலையம், 60 MLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அத்தியாவசியமான மின் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கின்றன.
இந்த தொழில் பூங்கா நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது. இதனால் ஏற்றுமதி இறக்குமதிக்கு சாதகமான இடமாக இந்த இடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி யமுனா எக்ஸ்பிரஸ்வேக்கு அருகிலேயே இருப்பதால் மற்ற மாநிலங்களுடனான சரக்கு போக்குவரத்தும் எளிமையாக இருக்கும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களும் செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன.
இதனால் செமிகண்டக்டர் சார்ந்த நிறுவனங்கள் தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தற்போதைக்கு குஜராத் மாநிலத்தில் டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications