இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வளர்ச்சி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலமாக 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 23.5 லட்சம் கோடியாகும். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் UPI அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பரிவர்த்தனைகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றுள்ளது. பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய மிகப் பெரிய மாற்றத்தை இது குறிக்கிறது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட தரவுகளின் படி , செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை அளவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்தத் தொகையின் மதிப்பு 14 சதவிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், தினசரி 53.5 கோடி UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையின் மதிப்பு தினசரி அளவில் ரூ. 75,801 கோடியாகும்.

அக்டோபர் மாதத்தில் இம்மிடியேட் பேமெண்ட் சர்வீஸ் (IMPS) பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதத்தில் IMPS பரிவர்த்தனைகள் 9% அதிகரித்து 46.7 கோடியை எட்டியுள்ளது. பரிவர்த்தனை மதிப்பு 11% அதிகரித்து ரூ. 6.29 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
FASTag பரிவர்த்தனைகளும் UPI பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பெரும் பங்காளித்துள்ளன. அக்டோபரில் FASTag பரிவர்த்தனைகள் 8 சதவீதம் உயர்ந்து 34.5 கோடியை எட்டியுள்ளது. பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.6,115 கோடியாக உள்ளது. இந்த மதிப்பு செப்டெம்பர் மாதத்தில் ரூ. 5,620 கோடியாக இருந்தது.
ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையும் (AePS) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட 10 கோடி பரிவர்தனையுடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் 26% அதிகரித்து 12.6 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட்களின் பங்கு விலை மார்ச் 2021-ஆம் ஆண்டில் 14 சதவீதம் முதல் 19 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 2024-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 40% முதல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு UPI முக்கிய பங்கு வகிக்கிறது. 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் UPI பரிவர்த்தனைகளின் அளவு 52 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் UPI பரிவர்த்தனை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு 40 சதவீதம் அதிகரித்து ரூ.116.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்த 83.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications