பிரதமர் மோடியின் 2 நாள் பிரான்ஸ் பயணத்தில் ரபேல் விமானம், நீர்மூழ்கி கப்பல் வாங்கும் 90000 கோடி ரூபாய் டீல்-க்கு மத்தியில், பிரான்ஸ் நாட்டில் உலகமே வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் தொழில்நுட்பமான யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அரசு அந்நாட்டில் UPI பேமெண்ட் சேவை அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்தியாவின் UPI தளத்தை பயன்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடாக இருக்கும். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி UPI பேமெண்ட் சேவையை பிரான்ஸ்-ல் அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

பிப்ரவரி மாதம் இந்தியாவின் UPI சேவை தளத்துடன் சிங்கப்பூரில் உள்ள PayNow எனப்படும் உடனடி பேமெண்ட் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டது மூலம் இருநாடுகள் மத்தியிலான பேமெண்ட் மிகவும் வேகமாக நடக்கிறது. இந்த நிலையில் UPI பேமெண்ட் சேவைக்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டால் சிங்கப்பூரைப் போலவே, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே எளிய மற்றும் வேகமாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
இந்தியா - பிரான்ஸ் மத்தியிலான வேகமாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்த, யுபிஐ உருவாக்கிய மத்திய அரசின் NPCI மற்றும் பிரான்ஸ் நாட்டின் LYRA-வும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. அஷ்வினி வைஷனவ் கடந்த வருடம் UPI தொடர்பாக இந்திய அரசு சுமார் 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த 30 நாடுகளில் பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷ்வினி வைஷனவ் கூறினார். இதேபோல் இந்தியாவின் ரூபே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் விரைவில் பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கடந்த ஆண்டு அஷ்வினி வைஷனவ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் NPCI - LYRA கூட்டணியின் ஒரு வருட பணியை பாராட்டும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பிரான்ஸ் பயணத்தில் UPI பேமெண்ட் மற்றும் Rupay கார்டுகள் ஏற்றுக்கொள்ளும் முறை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கிய மைல்கல் ஆக மாறும்.
இந்த இமைப்பு மூலம் UPI மற்றும் Rupay கார்டுகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் பணம் செலுத்த லைரா நெட்வொர்க்ஸ் அனுமதிக்கும். இது இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பணம் பரிமாற்றத்தை எளிதாக்கும். தற்போது சிங்கப்பூர், பூடான் போன்ற நாடுகளில் இந்தியர்கள் ஏற்கனவே UPI சேவையை பயன்படுத்தி வருகின்றனர், அண்டை நாடான நேபாள அரசுடன் இதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது இந்தியா.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications