UPI Paymentகளில் மேஜர் அப்டேட்!! ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம்? பாதுகாப்பை மேம்படுத்த முடிவு!!

இந்தியாவில் யுபிஐ செயலிகளின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாட்டின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ பயன்படுத்தி மக்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.

இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு டிஜிட்டல் பேமென்ட் பிரிவாக யுபிஐ இருந்து வருகிறது . நெட் பேங்கிங் ,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தெரியாத நபர்கள் கூட எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் யுபிஐ கட்டமைப்பு இருப்பதே இதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

UPI Paymentகளில் மேஜர் அப்டேட்!! ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம்?

என்பிசிஐ அமைப்பு யுபிஐ மோசடிகளை குறைக்கவும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்பும் பல்வேறு மாற்றங்களை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் இருக்கிறது. இதற்காக 2025இல் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன்படி ஒரு நாளைக்கு ஒரு நபர் யுபிஐ-இல் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

ஆனால் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பணம் செலுத்தலாம் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இதன்படி பங்குச்சந்தை முதலீடுகள் , காப்பீட்டு பிரீமியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பணம் செலுத்த முடியும் . அதேபோல அரசுக்கு வரி செலுத்துவதற்கும் டிராவல் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை ஒரே நாளில் யூபிஐ வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.

கிரெடிட் கார்ட் பேமெண்ட்களுக்கு ஒரே நாளில் ஆறு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தலாம். அதேவேளையில் லோன் ரீ பேமென்ட் எனப்படும் கடனை திரும்ப செலுத்துதல் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் இஎம்ஐ கலெக்ஷன்களுக்கும் யூபிஐ செயலி வாயிலாக ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்த முடியும் . மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் போதும் யுபிஐ செயலி வாயிலாக ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம்.

பயனாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு 2025 இல் கொண்டு வந்த மிக முக்கியமான ஒரு மாற்றம். 2026 இல் இதனை இன்னும் மேம்படுத்துவதற்கு என்பிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. தற்போது வரை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் நமக்கு இலவசமாக தான் கிடைக்கின்றன . அதற்கான செலவுகளை மத்திய அரசுதான் ஏற்றுக் கொண்டு வருகிறது.

இனிவரும் ஆண்டுகளிலும் இந்த இலவச சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. எனவே தற்போதைக்கு யுபிஐ பயன்படுத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு நாளைக்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பேமெண்ட் மேற்கொள்ளலாம்.

இது தவிர ஒரு நாளைக்கு 50 முறைக்கு மேல் உங்களுடைய யுபிஐ செயலியில் வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை பரிசோதிக்க முடியாது. அவ்வாறு 50 முறைகளை கடந்து விட்டால் உங்களுடைய பேலன்ஸ் செக் பிரிவு பிளாக் செய்யப்படும், 24 மணி நேரத்திற்கு பின்பு தான் அது ஆக்டிவேட் ஆகும்.புது ஆண்டில் யுபிஐ செயலியில் அதிக பரிவர்த்தனை வரம்பு கொண்டு வரப்படலாம் அதற்கு Two Step verification உள்ளிட்டவை கொண்டு வந்து, யுபிஐ பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+