நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நாட்டில் மில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் பயனடையும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16, 2024 முதல், தனிநபர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 லட்சம் வரையிலான வரிகளைச் செலுத்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (யுபிஐ) பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு பாதுகாப்பான மற்றும் எளிமையான பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய UPI பரிவர்த்தனை வரம்பு: ஆகஸ்ட் 24, 2024 தேதியிட்ட சுற்றறிக்கையில், வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக NPCI அறிவித்தது. இந்த மாற்றம் வரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு UPI-ஐப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய UPI பரிவர்த்தனை வரம்பு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓக்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடித் திட்டங்கள் உள்ளிட்ட பிற பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். ஆனால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மற்றும் UPI ஆப்-கள் இந்த புதிய வரம்புகளுடன் பொருந்துமா? என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பு குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். "யுபிஐ பயன்படுத்தி வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தும் என்பிசிஐ அறிவிப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இது டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை உயர்த்தும். இந்த முன்முயற்சி வரி வசூல் முறையை மேம்படுத்தும் மற்றும் வரி செலுத்துவோருக்கு மிகவும் வசதியான கட்டண முறையை வழங்கும் என்று என்டிடி டேட்டா பேமென்ட் சர்வீசஸ் இந்தியாவின் சிஎஃப்ஓ ராகுல் ஜெயின் கூறியுள்ளார்.
பியர்-டு-பியர் பரிவர்த்தனைகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 1 லட்சம் ஆகும். ஆனால் வங்கிகள் தங்கள் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் உள்ளது. எடுத்துக்காட்டாக, அலகாபாத் வங்கியின் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 25,000, அதே சமயம் HDFC பேங்க் மற்றும் ICICI பேங்க் ஆகியவை பியர்-டு-பியர் பேமெண்ட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. கூடுதலாக, வெவ்வேறு UPI ஆப்கள் மாறுபட்ட பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டிருக்கலாம்.
காப்பீடு மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் தொடர்புடைய பிற வகையான UPI பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு ரூ. 2 லட்சமாகும். எனவே ஒரு நபர் UPI செயலியைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்யக்கூடிய பணத்தின் அளவு, அவர்களின் வங்கி மற்றும் அவர்கள் பயன்படுத்தும் UPI செயலி நிர்ணயித்த குறிப்பிட்ட வரம்புகளையும் பொறுத்தே அமைகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications