ரூ 20.45 லட்சம் பணப்பரிவர்த்தனை.. புதிய மைல்கல்லை எட்டிய UPI நெட்ஒர்க்.. இதல்லவோ வளர்ச்சி!

சென்னை: வங்கிக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்வதை விட தற்போது UPI தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் முக்கிய காரணம் என்னவென்றால் வீட்டிலிருந்து படியே நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். பில்களை செலுத்தலாம், ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் பணம் பெறுவதும் சுலபமான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் UPI நெட்வொர்க் மே மாதத்தில் 1400 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் இயக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) நெட்வொர்க் மே மாதத்தில் 1400 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியதன் மூலம் புதிய வளர்ச்சி கண்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 1330 கோடி பரிவர்த்தனைகளிலிருந்து அதிகரிப்பைக் குறிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, மே மாதத்தில் ரூ.20.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.

 ரூ 20.45 லட்சம் பணப்பரிவர்த்தனை.. புதிய மைல்கல்லை எட்டிய UPI நெட்ஒர்க்.. இதல்லவோ வளர்ச்சி!

மக்களால் செய்யப்பட்ட UPI பரிவர்த்தனையின் மதிப்பு ஏப்ரல் மாதத்தில் 1330 கோடியாக இருந்தது. ஆனால் இந்த மதிப்பு மார்ச் மாதத்தில் 1344 கோடியாக இருந்துள்ளது. தற்போது மே மாத புள்ளிவிவரங்கள் 49 % வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. அதில் மே மாதத்தில் மட்டும் தினசரி பரிவர்த்தனை தொகை ரூ. 65,966 கோடி மற்றும் தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 45300 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் UPI சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் அதிகரித்துள்ளதை நாம் தெரிந்து கொள்ள முடியும். வங்கி சேவைகளை அணுகுவதற்கு பதிலாக, மக்கள் அனைவரும் தற்போது UPI தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற பயனர்களை விரிவுபடுத்துதல்: NPCI மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிராமப்புறங்களில் UPI பயன்படுத்துபவர்களின் வரம்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. Economic Times (ET) படி, அரசாங்கத்தின் நேரடி பலன் பரிமாற்ற (DBT) திட்டங்களின் பயனாளிகளை வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு UPI ஐப் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. NPCI மாவட்ட மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் பிரதான கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கட்டணச் சேவைகளை வழங்குகிறது.

PhonePe மற்றும் Google Pay ஆகியவற்றின் மேலாதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாத நிலவரப்படி, PhonePe 48.86 % சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து Google Pay 37.7 % சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.

சர்வதேச விரிவாக்கம்: RBI மற்றும் NPCI ஆகியவை UPI பயன்பாட்டை உலகளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 20 நாடுகளில் UPI அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் வரிசையில் உள்ளன. இந்தத் திட்டங்கள் 2028ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​சிங்கப்பூர், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, மலேசியா, இலங்கை, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் UPI சேவைகள் கிடைக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+