எங்குதான் யுபிஐ பயன்படவில்லை.. எல்லா இடங்களிலும் மக்கள் யுபிஐ தளங்களை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்த காலம் மாறி டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. பர்ஸ் எடுக்காமல் சென்றாலும் வெறும் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்.. ஒரு சில கிளிக்குகளில் உடனடியாக பணத்தை அனுப்ப முடிகிறது, பிறரிடமிருந்து பணத்தைப் பெற முடிகிறது.
ஏன் பெட்டி கடைகளில் கூட க்யூஆர் கோடு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு வேகமான மற்றும் வசதியான பரிவர்த்தனையை UPI வழங்குகின்றன என்றால் அது மிகையாகாது. ஒரு விஷயம் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ? அதே அளவு அதை பயன்படுத்தும் போது சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். அப்படி தான் ஒரு சிலர் கீபோர்டு கிளிக்கில் ஏற்படும் சிறு பிழையால் 500-க்கு பதிலாக 5000 அனுப்பிவிடுவார்கள். 1000-த்திற்க்கு பதிலாக 10,000 அனுப்பிவிடுவார்கள். இது போல் தெரியாத நபருக்கு பணம் செலுத்தி விட்டால்.. எப்படி தொகையை திரும்பப் பெறுவது? என்பதைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். நீங்கள் தெரியாமல் பணம் அனுப்பினாலும் ஒரு சில விஷயங்களைச் செய்தால் பணத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
தவறாக அதிகப்படியான பணம் அனுப்பிய உடனே என்ன செய்ய வேண்டும்?: நீங்கள் அனுப்ப நினைத்த தொகையை விட அதிகமாக பணத்தை அனுப்பி விட்டால்.. பதற்றமடையாமல் விரைவாக செயல்பட வேண்டும். பணத்தை பெறுபவர் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் பிரச்சனை இல்லை. அவரிடம் நடந்ததைக் கூறி மீண்டும் உங்களுக்கே அனுப்ப சொல்லலாம்.

தெரியாதவர் என்றால் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் தெரியாமல் பணத்தை அனுப்பி விட்டதாக கூறுங்கள். அதற்கான விவரங்களையும் அவர்களுக்கு அனுப்பலாம். ஒரு சில மனிதநேயமிக்கவர்கள் நீங்கள் தெரியாமல் அனுப்பி இருந்தால் உடனடியாக உங்களுக்கே மாற்றி விடுவார்கள்.
யுபிஐ தளங்களிலேயே புகாரை பதிவு செய்யலாம்: ஒரு வேளை நீங்கள் தவறாக பணம் அனுப்பிய நபர் மீண்டும் உங்களுக்கு பணத்தை அனுப்பவில்லை என்றால்.. நீங்கள் யுபிஐ அப்ளிகேஷன் மூலமாகவே புகாரை பதிவு செய்யலாம். அதற்கு நீங்கள் எந்த அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி இருக்கிறீர்களோ? அவருடைய அக்கவுண்ட் நம்பர், நீங்கள் செலுத்திய தொகை மற்றும் பரிவர்த்தனை நேரம், தேதி ஆகிய விபரங்களை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுடைய வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்: உங்கள் வங்கியின் கஸ்டமர் சப்போர்ட் சேவையை அழைத்து உங்கள் அக்கவுண்ட் விவரங்கள், நீங்கள் மாற்றி பணம் அனுப்பிய நபரின் அக்கவுண்ட் விபரங்கள், ட்ரான்ஸ்ஷாக்ஷன் ரெஃபரன்ஸ் நம்பர், பேமெண்ட் ரெசிப்ட் ஆகிய விவரங்களை வழங்குங்கள். வங்கியால் உடனடியாக நீங்கள் செய்த பரிவர்த்தனையை ரத்து செய்ய முடியாது. ஆனாலும் பெறுநரின் வங்கியோடு தொடர்பு கொண்டு ஒரு சில தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையை உடனடியாக கேன்சல் செய்து விடலாம் என்ற மிகப்பெரிய தவறான புரிதல் மக்களிடம் இருக்கிறது. ஆனால் நம்மால் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடியாது என்பதே நிதர்சன உண்மை.
வங்கிகள் மற்றும் யூபிஐ தளங்கள் உங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கினாலும்.. எல்லா நேரங்களிலும் அது சுமுகமாய் முடியும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில நேரங்களில் பணத்தை திரும்பப் பெறுவதில் தாமதம் கூட ஏற்படலாம். ஏன் சில நேரங்களில் பணம் கிடைக்காமலும் போகலாம். எனவே எப்பொழுதும் பணம் அனுப்பும்போது ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்து அனுப்புங்கள்.


Click it and Unblock the Notifications