இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார ரீதியில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை மேம்படுத்த மத்திய அரசு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி பல முக்கியமான திட்டங்களைக் கடந்த 20 வருடமாக அறிவித்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவின் வறுமை அளவுகள் குறித்து உலக வங்கி செய்த ஆய்வில் 2011 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வறுமை அளவு 12.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
நகரத்து வறுமை
இது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜின் ஆக விளங்கும் நகரங்களின் வறுமை அளவு 2 சதவீதம் அதிகரித்துள்ளது பெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
நகரத்து வறுமைக்கு மோடி அரசு 2016ல் அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடை தான் காரணம் என உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக வங்கி அறிக்கை
'Poverty in India Has Declined over the Last Decade but not as Much as Previously Thought', என்ற தலைப்பில் பொருளாதார வல்லுனர்களான சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வான் டெர் வெய்ட் ஆகியோர் இணைந்து எழுதிய ஆய்வறிக்கையில், 2011ல் 22.5 சதவீதமாக இருந்த தீவிர வறுமை அளவு, 2019ல் 10.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2004-2011 காலகட்டத்தில் காணப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் கணிசமாகக் குறைவாக உள்ளது.
நகரம், கிராமம்
இந்த ஆய்வறிக்கையில் நகர்ப்புறத்தை விடக் கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அளவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது முக்கியமானதாக விளங்குகிறது. இதேபோல் தான் கொரோனா தொற்றுக் காலத்தில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை நகர்ப்புறத்தை விடக் கிராமப்புறங்களில் சிறப்பாக இருந்தது.
கிராமத்து வறுமை
மேலும் இந்த ஆய்வு காலத்தில் 2019ல் பொருளாதார மந்த நிலையால் கிராமத்து வறுமை அளவு 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதேபோல் 2016ல் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது நகரத்து வறுமை 2 சதவீதம் அதிகரித்துள்ளது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
2016ல் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரே இரவில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத இந்திய நாணயம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது ஏழை மக்களின் வளர்ச்சியை அப்படியே நிறுத்தியது மட்டும் அல்லாமல் பல பாதிப்புகளுக்குத் தள்ளியது.
காகித பணப் புழக்கம்
இதன் எதிரொலியாக இந்தியாவின் ஜிடிபி 2015-16ல் 8.0 சதவீதமாக இருந்த நிலையில் 2018-19ல் 6.8 சதவீதமாகச் சரிந்தது. இதன் பின்பு அடுத்த வருடமே இந்தியாவில் நுகர்வு அதிகமான நிலையில் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் எல்லாம் காற்றில் பறக்கவிட்டு அதிகளவிலான காகித பணத்தைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தது மத்திய அரசு.
கொரோனா காலம்
இதன் பின்பு இந்திய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு 80 கோடி குடும்பங்களுக்கு அளித்த இலவச உணவு மக்களை மீண்டும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளாமல் காப்பாற்றியுள்ளது என ஐஎம்எப் அறிக்கை கூறுகிறது.
ஆனால் பணமதிப்பிழப்பு காலத்திலும் சரி, கொரோனா காலத்திலும் சரி வறுமையின் அளவு வேகமாக மீண்டு உள்ளது இந்தியாவின் பலம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications