எல்லாம் இந்த கொரோனாவால் வந்த வினை. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளூக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறதே தவிர, இன்னும் குறைந்தபாடு இல்லை. இது இப்படி ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது எனில், மறுபுறம் வேலையின்மை என்பது மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதமானது நகர்புறங்களில் 9.83% ஆக அதிகரித்துள்ளது. இதுவே கிராமப்புறங்களில் 7.63% ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்த கொரோனா தான். ஏனெனில் இந்த காலகட்டத்தில் முறையான பணியமர்த்தல் என்பது மிக குறைவே. அதோடு கிராமப்புறங்களிலும் வேலைவாய்ப்பு தேக்கமடைந்துள்ளது. செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட இந்திய பொருளாதாரத்தினை கண்கானிக்கும் மையமான சிஎம்ஐஇ மாத வேலையின்மை தரவுகளின் படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை மாதத்தில் 7.43% இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.35% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் நகர்புற மற்றும் கிராமப்புற வேலையின்மை விகிதம் முறையே ஜூலை மாதத்தில் முறையே 9.15% மற்றும் 6.66% ஆகவும் இருந்தது. ஆனால் இது ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 8.75% ஆகவும், இதே கிராமப்புற வேலையின்மை விகிதம் 8.44% ஆகவும், நகர்புற வேலையின்மை விகிதம் 9.41% ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த வேலையின்மை விகிதமானது, கொரோனா லாக்டவுனுக்கு முன்பு, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளது.
இந்த லிஸ்டில் வழக்கம்போல ஹரியானா மிக மோசமாக பாதிக்கப்பட்ட, அங்கு வேலையின்மை விகிதம் 33.5% ஆகவும், அதனையடுத்து திரிபுராவில் 27.9% ஆகவும், ராஜஸ்தானில் 17.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
இதே கர்நாடகா தான் இந்த லிஸ்டில் குறைந்த வேலையின்மை விகிதத்தினை பதிவு செய்துள்ளது. அது 0.5% ஆகும். இதற்கு அடுத்து ஒடிசா 1.4%மும், குஜராத் 1.9% ஆகவும் வேலையின்மை விகிதத்தினை பதிவு செய்துள்ளன.
எனினும் இது அடுத்து வரும் மாதங்களில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக இது வாய்ப்பாக அமையும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications