மத்திய அரசு, ஐபோன் மற்றும் ஐபாட் பயன்படுத்தும் மக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் iOS மற்றும் iPadOS மென்பொருளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் தான். இந்த குறைபாடுகள், ஹேக்கர்கள் உங்கள் சாதனத்தில்(Device) ஊடுருவி முக்கியமான தகவல்களை திருடவும், சாதனத்தை வேலை செய்யாத மாதிரியே செய்யவும் வாய்ப்பு அளிக்கின்றன. இதில் முக்கியமாக, டார்வின் அறிவிப்பு அமைப்பில் (Darwin Notification System) உள்ள ஒரு குறைபாடு, அனுமதி இல்லாமல் கூட முக்கியமான கணினி செயல்பாடுகளை நடத்த வழிவகுக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று.
இந்த பிரச்சனை பழைய மற்றும் சில புதிய ஐபோன் மற்றும் ஐபாட் மாடல்களில் உள்ளது. குறிப்பாக iPhone XS மற்றும் அதற்குப் பிறகு வந்த மாடல்கள், iPad Pro (2வது தலைமுறை மற்றும் அதற்கு மேற்பட்டவை), iPad (6வது தலைமுறை மற்றும் மேலே), iPad Air (3வது தலைமுறையிலிருந்து மேலே), iPad Mini (5வது தலைமுறையில் இருந்து மேலே) போன்ற சாதனங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், iOS 18.3 க்கு முந்தைய பதிப்புகள் மற்றும் iPadOS 17.7.3 க்கு முந்தைய பதிப்புகள் பயன்படுத்தும் சாதனங்கள் இந்த ஆபத்தில் உள்ளன.

இந்த குறைபாடுகளை ஹேக்கர்கள் பயன்படுத்தினால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (பேஸ்புக், வங்கிக் கணக்கு, மெயில் போன்றவை) திருடப்படலாம், சாதனம் தானாகவே செயலில் இருந்து நிறுத்தப்படலாம், பாதுகாப்பு முறைகள் மீறப்படலாம், உங்கள் சாதனத்தில் நீங்கள் அனுமதி அளிக்காத செயலிகள் ஓடலாம், உங்கள் சாதனம் முற்றிலும் வேலை செய்யாததாக மாறலாம் என அரசின் CERT-In (Computer Emergency Response Team - India) தெரிவிக்கின்றது.
இந்த பாதிப்புகள் உண்மையில் உலகின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், இது ஒரு சின்ன விஷயம் அல்ல மிக முக்கியமான விஷயம். இந்த ஆபத்தைத் தவிர்க்க, மத்திய அரசு மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கீழ்கண்ட முக்கியமான ஆலோசனைகளை வழங்குகின்றன. உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் சாதனத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். iOS மற்றும் iPadOS மென்பொருளின் புதிய பதிப்பை நிறுவுங்கள். இது பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யும்.
புதிய செயலிகள் நிறுவும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாத செயலிகளை இந்நேரம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். சாதனத்தில் அசாதாரணமான மாற்றங்களை கவனிக்க வேண்டும். உதாரணமாக, சாதனம் தானாக செயல்படுவது, புதிய செயலிகள் தானாகவே நிறுவப்படுவது போன்றவை நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமாக மென்பொருள் புதுப்பிப்புகளை செய்யுங்கள். இது உங்கள் சாதனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications