அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி துறைகள் பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களின் வர்த்தகம் குறைந்து, லாப அளவுகள் குறைந்து, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் இதை தீர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இக்கடிதத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் தினசரி ரூ.60 கோடி வருவாய் இழப்பை சந்திக்கின்றனர் என்றும் இதன் முலம் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது. அமெரிக்காவின் வரியால் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக திருப்பூரில் ஒப்புதல் கொடுக்கப்பட்ட ரூ.15,000 கோடி ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன. இதனால் உற்பத்தி 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டர்கள் வருவதும் குறைந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் லாபத்தை விட்டுக்கொடுத்து தள்ளுபடி விலை தர வேண்டிய நிலை உள்ளது என பிரச்சனையை விவரித்தார்.
இந்தியாவின் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 28 சதவீத பங்கு வகிக்கிறது. இத்துறையில் மட்டும் சுமார் 75 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதேபோல் தோல் மற்றும் காலணியின் மொத்த இந்திய ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 40 சதவீத உள்ளது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
அமெரிக்க வரி உயர்வு இந்த துறைகளை பெரிதும் பாதிக்கிறது. இது பொருளாதார இழப்பு மட்டுமல்ல, ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது என ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக மோடிக்கு தெரிவித்துள்ளார்.
டெக்ஸ்டைல் துறையில் ஏற்பட்ட பாதிப்பு எப்படி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை பாதிக்கிறதோ, அதேபோல் தோல் மற்றும் காலணி துறையில் ஏற்பட்ட பாதிப்பு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க தள்ளுபடி தர வேண்டிய நிலை உருவாகியுள்ளது, இதனால் லாப அளவுகள் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
More From GoodReturns

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications