டெல்லி: சமீப மாதங்களாக ஈரான் அமெரிக்கா இடையேயான பிரச்சனை சுமூக நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டது அமெரிக்கா. ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த, இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.
இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சுமூக நிலை எட்டப்படுமா? என்ற எண்ணத்தினை உடைத்துள்ளது. இப்போதைக்கு இதற்கு வாய்ப்பு குறைவு என்பதையும் தெளிவுபடுத்திகிறது.
ஈரானுக்கு எதிர்ப்பா?
அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதேச அளவிலான பல நிறுவனங்கள், ஈரானின் டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்பிலான மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தான் அமெரிக்கா இந்த தடை அறிவிப்பினை வெளியிட்டது.
இந்தியாவின் எண்ணம்?
அமெரிக்கா ஈரான் இடையே சுமூக நிலை எட்டப்பட்டால் அது இந்தியாவுக்கு சாதகமாகலாம். இதன் மூலம் இந்தியா மீண்டும் பழையபடி ஈரானிடம் எண்ணெய் வாங்க முற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய நிறுவனம் ஈரானிடம் எண்ணெய் வாங்க நினைத்தாலும் இனி தவிர்க்கலாம். ஏனெனில் இந்தியா மீது அமெரிக்கா தடை விதித்தால் என்னவாகும்? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இனி இந்தியா தவிர்க்க நினைக்கலாம்.
இனி நடக்குமா?
ஏனெனில் இந்தியா ஈரானுடன் ஈடுபடும் எண்ணெய் வணிகத்தினை விட, இந்தியா அமெரிக்கா இடையேயான வணிக நடவடிக்கைகள் அதிகம். கடந்த செப்டம்பர் 16 அன்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்தித்த பின்னர் இந்தியாவின் மறுபரிசீலனைக்கான வாய்ப்பு இருந்தது. ஈரான் இந்தியாவின் சாதகமான அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தது. ஆனால் இதெல்லாம் இனி நடக்குமா? என்பதும் சந்தேகத்தினை கிளப்பியுள்ளது.
இறக்குமதி
ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி ஏப்ரல் - ஜூலை வரை 414% அதிகரித்து, 13.4 பில்லியன் டாலராக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டில் 11.2 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 773% அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையேயான அனுசக்தி ஒப்பந்தம் இனி புதுபிக்கப்படுமா என்பதும் சந்தேகமாகி விட்டது. அதோடு இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியையும் அதிகரித்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் தடை பிரச்சனையை எதிர்கொள்ளாது எனலாம்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!



Click it and Unblock the Notifications