அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கச் சீனாவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC, டிரோன் தயாரிப்பில் முன்னோடியான DJI டெக்னாலஜி உட்படப் பல முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வர்த்தகம் செய்யத் தடை விதித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
டிரம்ப் அரசின்
டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்க - சீனா இடையில் நடைபெற்று வரும் வர்த்தகப் போர் தொடரும் என்பதையும், அமெரிக்கா சீனா மற்றும் சீன நிறுவனங்கள் மீதான கடுமையான கண்காணிப்பு தொடரும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.
புதிய அதிபர் ஜோ பிடன்
மேலும் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஜோ பிடன் சீனா மீதான தடைகளை நீக்குவது குறித்தும், தளர்வு அளிப்பது குறித்தும் இதுவரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதால் ஜோ பிடன் ஆட்சியிலும் சீனா தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
60 சீன நிறுவனங்கள் மீது தடை
அமெரிக்காவின் காமர்ஸ் அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 77 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய entity list-ஐ வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 60 நிறுவனங்கள் சீனா-வை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் இதற்கு முன் ஹூவாய் டெக்னாலஜிஸ் உட்பட 150க்கும் அதிகமான நிறுவனங்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC
அமெரிக்காவின் வர்த்தக அமைச்சகம், சீனாவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC மக்களுக்கான தொழில்நுட்பத்தை ராணுவத்திற்குப் பயன்படுவதாகவும், SMIC மற்றும் சீன ராணுவத்தின் தொழிற்துறை நிறுவனங்களுடன் பல்வேறு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பிற நாட்டு ராணுவங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என SMIC நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்துள்ளது.
ட்ரோன் நிறுவனமான DJI
இதோடு உலகின் மிகப்பெரிய ட்ரோன் நிறுவனமான DJI, AGCU சைன்டெக், சீனா நேஷனல் சைன்டிபிக் இன்ஸ்ட்ருமென்ட் அண்ட் மெட்டிரீயல்ஸ், குவாங் சீ குரூப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான மனித உரிமை மீறல் செயல்களைச் செய்யும் காரணத்திற்காக இந்த நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது டிரம்ப் அரசு.
சீனா பதிலடி கொடுக்கும்
அமெரிக்க அரசு வெளிநாட்டு நிறுவனங்களை முடக்கும் தொடர்ந்து நடத்தி வருவது ஏற்க முடியாது, இதை நிறுத்தாத பட்சத்தில் சீன அரசும் தக்க நடவடிக்கையை எடுக்கும் எனச் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான Wang Yi தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications