அமெரிக்கா விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரிகளுக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீனா, அந்நாட்டுப் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் பாதுகாக்கப் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
டிரம்ப் தலைமையிலான அரசு அந்நாட்டுக் கடனை குறைக்கவும், தனது வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தைப் பணமாக்கும் முயற்சியில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் வர்த்தக கூட்டாளிகள் நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை விதித்து வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளது.

15 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையில் வரியை டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்துள்ளார். இதுதவிர வரி விதிப்பில் சிக்காத நாடுகளிடம் இருந்து வரும் பொருட்களில் இருந்து வருமானத்தை ஈட்டும் பொருட்டு பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத அடிப்படை இறக்குமதி வரியை விதித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதன் மூலம் அமெரிக்காவுக்குக் குண்டுமணி விற்றாலும் வரி, ஏரோபிளேன் விற்றாலும் வரி.
இந்த நிலையில் சீன வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட நலன்களை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மொத்தமாக இந்த வரி மூலம் ரத்து செய்துள்ளது என்று விமர்சித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவைப் பல வார திட்டமிடலுக்கு பின்பு கொண்டு வந்துள்ளது, எனவே இதில் இருந்து பின்வாங்காது. இதேபோல் இந்தியா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் தற்போது டிரம்ப் அரசுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்குச் சாதகமாக ஏதேனும் பிற நாடுகளிடம் இருந்து பொருட்களே, சேவைகளோ கிடைத்தால் கட்டாயம் வரி குறைக்கப்படும் என்பது தான் டிரம்ப்-ன் திட்டம்.
அமெரிக்கா - சீனா மத்தியிலான பேச்சுவார்த்தையில் எவ்விதமான உடன்பாடு ஏற்படாது, இப்படியிருக்கும் வேளையில் சீனா அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், சீன பொருட்கள் மீது 34% வரி விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட 20% வரியுடன் இது சேர்ந்து, மொத்த வரி 54% ஆக உயர்கிறது. டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்திய 60% வரி விகிதத்திற்கு இணையான வரி இது. இந்த வரிகள் அமல்படுத்தப்படுவது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதட்டங்களை மேலும் அதிகரிக்கிறது.
டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ், உலக நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் 10% அடிப்படை வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையான அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கு இந்த அடிப்படை வரி வரும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதேபோல் நாடு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ரெசிப்ரோக்கல் வரி ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வரிகளுக்குக் கூடுதலாக, அதிபர் டிரம்ப் "டி மினிமிஸ்" எனப்படும் வர்த்தக ஓட்டையை மூட நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஓட்டை மூலம் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் குறைந்த மதிப்புள்ள பார்சல்கள் அமெரிக்காவிற்கு வரி இல்லாமல் நுழைய அனுமதிக்கப்பட்டது. இந்த ஓட்டையை மூடுவது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகத்தை மேலும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications