சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிக சவாலான விஷயமாக மாறியுள்ளது. இதற்கிடையில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை உயர்த்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் தாக்கம்
டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நிறுவனங்களின் செலவினை அதிகரிக்கலாம். இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இறக்குமதியில் தாக்கம்
அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, அமெரிக்காவின் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வழிவகுக்கும். இது அமெரிக்காவின் தேவையை ஊக்கப்படுத்தும், ஆனால் அதேசமயம் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது குறிப்பாக இறக்குமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எரிபொருள்
ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலை அதிகரிப்பால், பணவீக்கம் என்பது உச்சம் தொட்டுள்ளது. இதற்கும் மேலாக எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அன்னிய பரிமாற்றங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் வட்டி விகிதத்தின் மத்தியில், இந்தியா மற்றும் மலேசியாவிலும் இந்த மாதத்தில் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
எதில் தாக்கம்
எப்படியிருப்பினும் ஃபெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வானது, சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக போர்ட்போலியோ முதலீடுகள் வெளியேற்றம், பலவீன நாணய வளர்ச்சி என பல்வேறு காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்தியாவின் நிலை
அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நடப்பு மாதத்தில் இதுவரையில் பெரியளவிலான முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதனால் பங்கு சந்தைகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவினை எட்டியுள்ளது.