அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை மீண்டும் தளர்த்தியுள்ளது. இன்று வெளியான முடிவுகளின் படி, பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக குறைக்கப்பட்ட வட்டி விகிதமாகும். இதன் மூலம், வட்டி வரம்பு 4.25% முதல் 4.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தலைமையிலான FOMC இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு சந்தை கணிப்புகளுக்கு இணையாக ஒத்துப்போகும் நிலையில், அடுத்த வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் பணவீக்க அழுத்தங்கள் இருக்கும் காரணத்தால் இதை கட்டுக்குள் வைக்க 2025 ஆம் ஆண்டில் இரண்டு முறை மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதத்தில், பெடரல் ரிசர்வ் 50 அடிப்படை புள்ளிகள் என்கிற அதிரடியான வட்டி குறைப்பை அறிவித்தது, அப்போது அமெரிக்காவில் குறைந்து வரும் பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய பொருளாதார தரவுகள், குறிப்பாக தொடர்ந்து நிலவும் அதிக பணவீக்கம், மிகவும் கவனமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாடு உடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை எதிர்த்து போராட நான்கு தசாப்தங்களுக்கு பிறகு செப்டம்பர் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. வட்டி விகிதங்களை குறைப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், கடன் வாங்கல் மற்றும் செலவினங்களை ஊக்குவிக்கவும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மீட்க முடியும் என பெடரல் ரிசர்வ் நம்புகிறது.
இந்த வட்டி விகித குறைப்பு இந்திய முதலீட்டு சந்தை மட்டும் அல்லாமல் தங்கம், பிட்காயின் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications