இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் தற்போது அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதன் தாக்கம் பங்குச்சந்தையில் எப்படி இருக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது. நேற்று உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதம் காரணமாக 1.5 சதவீதம் முதல் 1.75 சதம் வரை வட்டிவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு
1994 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 28 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கத்திற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அமெரிக்க பெடரல் வங்கி
பொருளாதாரத்தில் பணவீக்கம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அச்சம் காரணமாக அமெரிக்க பெடரல் வங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த முடிவால் மிகப் பெரிய அளவில் பணவீக்கம் சரியாக வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில்லறை விற்பனை
அமெரிக்க சில்லறை விற்பனை கடந்த மே மாதம் மிகவும் குறைந்ததையடுத்து அட்லாண்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கி அதன் 2ஆம் காலாண்டு வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 0% என குறைத்தது. நுகர்வோர் செலவினங்களின் மந்தநிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா ஏற்கனவே மந்தநிலையில் இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிபுணர்கள்
அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருடங்களில் மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே வட்டி விகித உயர்வு என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் கவலை
ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications