அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணி செய்தவர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பதற்கான தகுதியாக நிர்ணயம் செய்திருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
ரெடிட் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தான் விண்ணப்பம் செய்த நிறுவனத்தைச் சேர்ந்த மனித வளத்துறை அதிகாரி தவறுதலாக அவர்களின் ஊழியர்கள் தேர்வு நடைமுறைக்கான நிபந்தனைகளை தன்னுடன் பகிர்ந்து விட்டதாகவும் கூறி அவர் அந்த நிபந்தனைகளை ரெடிட் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் எந்தெந்த தகுதி இருந்தால் அவர்களை வேலைக்கு தேர்வு செய்யலாம் என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அவருடைய இந்த ரெடிட் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் எம்ஐடி, ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாட்டர் லூப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பிரிவில் 4 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும், குறிப்பாக மாடர்ன் ஜாவா ஸ்கிரிப்ட்டில் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் லாங்குவேஜ் மாடல்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அது மட்டும் இன்றி விசா ஸ்பான்சர் அடிப்படையில் யாரையும் வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்து வேலைவாய்ப்பு வழங்க முடியாது என கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த வேலை வாய்ப்பு என்பது தெளிவாகியுள்ளது.
இது தவிர இன்டெல், ஹெச்பி, டிசிஎஸ், டாடா, மகேந்திரா, இன்போசிஸ், கேப் ஜெமினி, டெல், காக்னிசன்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்பு வழங்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது பலரும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் ஆட்கள் தேர்வு நடைமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரிய பெரிய கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு எனக் கூறுவது எப்படி நியாயமாகும் என ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications