அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்கள் ஒரு சிறிய தவறு செய்தால் கூட அவர்களின் விசாக்களை ரத்து செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயிலக்கூடிய வெளிநாட்டு மாணவர்கள் தற்போது கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் ஒரு சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. அமெரிக்க அரசு வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் விசா பெற்று கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி விசாவை ரத்து செய்து நாடு கடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் இந்திய மாணவர்கள் பலரும் சாலை விதிமுறைகளை மீறுவது என்பன உள்ளிட்ட சாதாரண மற்றும் சிறிய தவறுகளுக்கு கூட அவர்களுக்கான விசாக்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இது போன்ற தவறுகளுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் சில மாணவர்களுக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும். ஆனால் சாலை விதிமுறைகளை மீறுவது போன்ற சிறிய தவறுகளுக்கு கூட விசாவினை ரத்து செய்யும் நடைமுறை தற்போது அதிகரித்து வருவதாக மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இந்த மாணவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதா எனக்கு கண்காணித்து ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்களுக்கெல்லாம் தற்போது விசா ரத்து செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார் . பின்னர் அவர் அபராதம் செலுத்தியதை அடுத்து அரசு அவரை விடுவித்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்காக அவரின் விசா ரத்து செய்யப்படுவதாக மெசேஜ் வந்திருப்பதாக கூறுகிறார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் 300க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் விசா சிறு காரணங்களை காட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவின் மிசோரி நகரில் சென்று படிக்கும் ஒரு மாணவர் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாராம். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அவர் அடுத்த ஓராண்டு காலத்திற்கு காவல் நிலையத்தில் சென்று தான் மது அருந்தவில்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றுகளை தந்து வந்தாராம்.
இந்த சூழலில் திடீரென அவருடைய விசாவை அமெரிக்கா அரசு ரத்து செய்திருப்பதாக கூறுகிறார். இவ்வாறு விசா ரத்து செய்யப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் உங்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் உடனடியாக இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல்வேறு மாணவர்களும் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுவரை தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications