அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட வரி விதிப்புகளை தற்போது ஹாங்காங்கிற்கும் விரிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதும் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு விதிக்கப்பட்ட வரிகளுக்கு இணையாக அமைகிறது. இந்த நடவடிக்கை உலகின் இரண்டு பெரும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்துகிறது.

ஹாங்காங்கிற்கும் இந்த வரிகளை விரிவுபடுத்துவது அமெரிக்கா-சீனா வர்த்தக உறவில் கூடுதலான சிக்களை ஏற்படுத்துகிறது. ஹாங்காங் தற்போது சுயாட்சி முறையில் இயங்கி வந்தாலும், சீனாவுடன் அதன் நெருங்கிய பொருளாதார உறவு, அரசியல் களம் வரையில் அதன் ஆதிக்கம் உள்ளது. இதன் வாயிலாக சீனாவுக்கு இணையாக ஹாங்காங் நாட்டின் மீதும் அமெரிக்கா வரி விதித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை ஹாங்காங்கின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஹாங்காங், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டிற்கும் இடையேயான வர்த்தகத்தில் பெருமளவில் சார்ந்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு வர்த்தகம் செய்ய முடியாத பல நிறுவனங்கள் ஹாங்காங் நாட்டில் இருந்து செயல்படும் வேளையில் அமெரிக்காவின் வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
அமெரிக்காவின் வரிக்கு ஏற்கனவே சீனா பதிலடி கொடுத்திருக்கும் வேளையில், தற்போது ஹாங்காங் வரி விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்கா சீனா மீது 10 சதவீத வரி விதிப்புக்கு சீனா, அமெரிக்காவின் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றின் மீது 15 சதவீத கூடுதல் இறக்குமதி வரியும், கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் சில வாகனங்கள் மீது 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக சீன நிதி அமைச்சகம் பிப்ரவரி 4ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்த கனடா, மெக்சிகோ நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள வேளையில் சீனா மீதான 10 சதவீத வரி மட்டும் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா ஹாங்காங் மீதும் வரி விதித்துள்ளது.
ஹாங்காங் பொருட்கள் மீது கூடுதல் வரியை அமெரிக்க அரசு விதித்துள்ளதால், உலகளாவிய விநியோக சங்கிலிகள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஹாங்காங்கில் செயல்படும் வணிக நிறுவனங்களும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் இந்த புதிய வரிகளால் பொருட்களை அதிகப்படியான விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும், இதற்கிடையில் இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் இதில் பலன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications