அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதலே நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார். ஒரு புறம் விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடு விதித்தார். மறுபுறம் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை பிடித்து சொந்த நாட்டிற்கே அனுப்பி வைத்து வருகிறார்.
எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து தங்கி இருப்பவர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு நாடு கடத்தி வருகிறது அமெரிக்க அரசு. அந்த வகையில் டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களிலேயே அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருந்த ஏராளமான இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் வெளியேறலாம் எனவும் உங்களுக்கு தேவையான விமான டிக்கெட்டையும் நாங்களே பெற்று தருகிறோம் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஹோம் லேண்ட் செக்யூரிட்டி துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்கே போகலாம் என கூறியிருக்கிறது. விமான டிக்கெட் பெற்று தருகிறோம் அதுமட்டுமில்லாமல் 2600 டாலர்கள் எக்ஸிட் போனஸாக தருகிறோம் என கூறியுள்ளது. 2200 அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 2.4 லட்சம் ரூபாய் ஆகும். அந்த வகையில் அமெரிக்காவில் முறையாக தங்கியிருக்கக் கூடிய இந்தியர்கள் CBP HOME செயலியை பயன்படுத்தி நீங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியா மட்டுமில்லாமல் கொலம்பியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் இந்த அறிவிப்பினை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக நாட்டினுள் நுழைந்தவர்களை அமெரிக்க அரசு illegal aliens என்ற கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணம் இல்லாமல் தங்கி இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் மீண்டும் தாய் நாடு திரும்புவதற்கு சிபிபி ஹோம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இது அவர்கள் தாங்களாகவே தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்வதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும். இதில் இந்தியர்கள் மற்றும் சீன நாட்டவர்கள், கொலம்பிய நாட்டவர்கள் பதிவு செய்து கொண்டால் அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு தேவையான டிக்கெட் விமான டிக்கெட் மற்றும் கூடுதலாக 2600 டாலர்கள் போனஸ் தொகையோடு அனுப்பி வைப்போம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . நீங்கள் அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை செய்தாலும் சரி பள்ளிக்கு சென்றாலும் சரி எதுவாக இருந்தாலும் இதில் பதிவு செய்து கொண்டு நீங்களாகவே தாய் நாடு திரும்பி விடுங்கள் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் கைது நடவடிக்கைக்கும் ஆளாகாமல் நீங்கள் பாதுகாப்பாக தாய்நாடு செல்ல வேண்டும் என்றால் இதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய வழி என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில் அமெரிக்க அரசு இந்திய குடிமக்களை இப்படி நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தூதரக ரீதியாக பேச்சு நடத்தி அவர்களை தாய்நாட்டிற்கு மரியாதையாக அனுப்பி வைக்கலாமே என பலரும் கூறுகின்றனர்.
More From GoodReturns

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications

