பிப்ரவரி 28ஆம் தேதி திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தன. ஆறு வார காலமாக நீடித்த இந்த போர் கடந்த வாரத்தில் இருந்து சற்று அமைதிக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவும் ஈரானும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் 21ஆம் தேதி வரை எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படாது என இருதரப்பும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளன.
அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து வார்த்தை மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. டிரம்ப் ஈரானை மிரட்டுவதும் பதிலுக்கு ஈரான் டிரம்பை கேலி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சனிக்கிழமை முதல் கட்டமாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில் விரைவில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அதாவது ஏப்ரல் 21 வரை தான் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும். ஈரான் போர் மீண்டும் தொடங்குவது உலக சந்தையில் மேலும் கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தும். இதனால் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடையும்.
இந்த சூழலில் தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அரசு பதில் அளித்து இருக்கிறது. அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் தற்போது ஈரான் உடன் பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமாக சென்று வருவதாக தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் அமெரிக்கா தரப்பு இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்காது என்றும் அவர் திட்ட வட்டமாக கூறியிருக்கிறார்.
ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக சென்று வருகிறது, முக்கியமான விஷயங்களில் முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். அமெரிக்கா தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்ட அவர் இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே இந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலேயே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிப்பதாக ஆக்ஸியோ தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற குறிப்பிட்ட சில முக்கியமான விஷயங்களில் உடன்பாடு ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?



Click it and Unblock the Notifications

