அமேசான், வால்மார்ட் போன்ற முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களின் சார்பாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக அமைப்பு, ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மீதான அன்னிய முதலீட்டு விதிகளைக் கடுமையாக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்காவின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனங்களான அமேசானின் இந்திய கிளையும், வால்மார்ட்-ன் பிளிப்கார்ட் நிறுவனமும் அன்னிய முதலீடுகளைக் கட்டுப்படுத்த கடுமையான அமைப்பை உருவாக்கியுள்ளது என வர்த்தகர்கள் குற்றம்சாட்டிய நிலையில் மத்திய அரசு இத்துறை மீதான அன்னிய முதலீட்டு விதிகளை மறுசீரமைப்புச் செய்யச் சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்தது.
அன்னிய முதலீட்டு விதிகள்
இதைத் தொடர்ந்து அமெரிக்க லாபி குரூப் ஒன்று ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மீதான அன்னிய முதலீட்டு விதிகளைக் கடுமையாக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் எவ்விதமான தவறும், விதிமீறல்களையும் இந்தியாவில் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மார்கெட்பிளேஸ் சேவை
வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் மார்கெட்பிளேஸ் சேவையை அளிக்க இந்திய அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில் இந்திய வர்த்தகர்கள் அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளர்களை மட்டுமே தேர்வு செய்து அதிகளவிலான வர்த்தகத்தையும், தள்ளுபடிகளையும் அளித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
விற்பனையாளர்களுக்குப் பாதிப்பு
அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது கூட்டணி நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட விற்பனையாளர்களை மட்டுமே தேர்வு செய்து சலுகை அளிப்பதன் மூலம் இந்த ஈகாமர்ஸ் தளத்தில் இருக்கும் சிறு விற்பனையாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2018 கட்டுப்பாடு
2018ல் இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகத் தத்தம் தளத்தில் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என இந்திய அரசு புதிய விதிமுறையை விதித்தது. இது ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறை
தற்போது இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களில் மறைமுகமாகப் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகத் தத்தம் தளத்தில் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்ற புதிய கொள்கை மாற்றத்தை அறிவிக்கத் திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications