அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50 சதவீத வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்தியாவை சேர்ந்த 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதி துறைக்கே பெரிய பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.
தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகத் துறை அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கூடிய விரைவில் இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிற்கு சென்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றனர். இது குறித்து ஒரு பாசிட்டிவான தகவலை தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பகிர்ந்திருக்கிறார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் தனிப்பட்ட முறையில் நான் உறுதியாக கூறுகிறேன் அடுத்த இரண்டு மாதங்களில் அல்லது அதற்கு முன்னதாகவே கூட , ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது விதிக்கப்பட்ட அந்த கூடுதல் 25 சதவீத வரி நீக்கப்பட்டு விடும் எனக் கூறியிருக்கிறார் . மேலும் இந்தியா மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியும் 10 அல்லது 15 சதவீதமாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார் .
முதலில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் எழுந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே இந்த வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சு வார்த்தையை சுட்டிக்காட்டி நாகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் . அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் ஜவுளி ,ரசாயனம் ,கடல் உணவுகள் ,நகைகள் மற்றும் நவரத்தினங்கள் , இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன .ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி என்பது பத்து மாதங்களில் இல்லாத சரிவை கண்டு வெறும் 6.87 பில்லியன் டாலர்களாக இருக்கிறது .
இந்தியாவின் மிகப்பெரிய ஒரு ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து திகழ்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 20% பொருட்கள் அமெரிக்க சந்தையை நோக்கி தான் செல்கின்றன. 2024- 25 ஆம் நிதி ஆண்டில் இந்தியா 86.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இரு தரப்புக்கு இடையே ஏற்படும் வர்த்தக ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கும் ஏற்றுமதி தொழிலை சார்ந்திருப்பவர்களுக்கும் பெரிய நிம்மதியை தரும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications