ஈரானை மொத்தமாக முடக்க பக்கா பிளான்! நேரத்தை குறித்த Trump.. திங்கட்கிழமை இரவு 11.30 காத்திருக்கும் அதிர்ச்சி

அமெரிக்கா ஈரான் உடனான போரில் டிரம்ப் நினைத்தது எதுவும் நடக்காத நிலையில், வளைகுடா நாடுகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை தற்போது வளைகுடா நாடுகளில் இருக்கும் தனது ராணுவ தளத்தை காலி செய்துவிட்டு வெளியேறும் ஆலோசனையில் உள்ளது. இதேவேளையில் டிரம்ப் ஈரான் மீதான ராணுவ தாக்குதல் நிலைப்பாட்டில் இருந்து விலகி தற்போது நிதியியல் ரீதியான தாக்குதலுக்கு தயராகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிரான economic D-Day அறிவிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அரசு இதுவரையில் உலகில் எந்தொரு நாட்டின் மீதும் விதிக்காத கட்டுப்பாட்டையும், பொருளாதார நெருக்கடியை அறிவிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்க அரசின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்-ம் உறுதி செய்துள்ளார்.

ஈரானை மொத்தமாக முடக்க பக்கா பிளான்! நேரத்தை குறித்த Trump.. திங்கட்கிழமை இரவு 11.30 காத்திருக்கும் அதிர்ச்சி

இதனால் ஈரானை தாண்டி உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் ஈரானை உலகளாவிய வர்த்தக சந்தையிலும், நிதியியல் சந்தையிலும் இருந்து ஒதுக்கிவைக்கும் முயற்சியாகவே இருக்கும். இதனால் ஈரான் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பெரும் பிரச்சசனையாக இருக்கும் என்பதே தற்போதைய பிரச்சனை.

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி ஈரான் உடன் வர்த்தகம் செய்யும், நிதியுதவி, ஆயது சப்ளை என எந்த வகையில் தொடர்பு வைத்திருந்தாலும் அந்த நாட்டிற்கு 25 முதல் 50 சதவீதம் வரையில் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

இதுமட்டும் அல்லாமல் ஈரானில் இருந்து சந்தைக்கு மறைமுகமாத வரும் கச்சா எண்ணெய்யை மொத்தமாக முடக்க அமெரிக்கா அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமா கரன்சி ஸ்வாப் லைன்ஸ், நிதி பரிமாற்றம், வெளிநாட்டு நாணய பரிமாற்ற அமைப்புகள், ஈரானின் வர்த்தகத்திற்கு உதவும் நிறுவனங்கள் என பல தரப்பின் மீது பெரும் கட்டுப்பாட்டை விதிக்க உள்ளதாக தெரிகிறது.

ஈரானுக்கான Economic D-Day அறிவிக்க ஸ்காட் பெசென்ட் திங்கட்கிழமை இந்திய நேரப்படி அரவு 11.30 மணிக்கு, அமெரிக்க நேரப்படி மதியம் 2 மணிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

மறுமுனையில் ஈரான் இன்று, நேற்றில்லை 1970 முதல் அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக தடைகளை விதித்துள்ளது.

Recommended For You

ஏன் பிப்ரவரி மாதம் அமெரிக்கா போர் தாக்குதலை நடத்திய பின்பு கடல் போக்குவரத்து, எரிசக்தி, நிதியியல் தடை, கடற்படை கொண்டு ஈரான் துறைமுக முற்றுகை வரையில் பல கட்டுப்பாடுகளையும், நெருக்கடிகளை விதித்துள்ளது அமெரிக்கா.

கடந்த 6 மாத காலத்தில் ஈரான் கப்பல், கப்பல் நிறுவனங்கள், ஈரான் தலைவர்கள், விமானங்கள், விமான நிறுவனங்கள், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி நிதி பரிமாற்றத்தை தடை செய்தும், முடக்கியும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் இப்புதிய கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு விதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+