அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். குறிப்பாக இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். அதேசமயம், டிரம்ப் நிர்வாகம் தனது பரஸ்பர வரி கொள்கையின் நோக்கத்திலிருந்து மருந்துகள் மற்றும் செமிகண்டக்ர்களுக்கு விலக்கு அளித்து இருந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் மருந்து பொருட்களுக்கு வரி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் விரைவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். நேஷனல் ரீப்யூப்லிக்கன்ஸ் காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், நாம் மருந்து பொருட்களுக்கு மிக விரைவில் ஒரு பெரிய வரியை அறிவிக்கப் போகிறோம். மருந்து நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை அமெரிக்காவுக்கு மாற்ற ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது இந்த நடவடிக்கை.

நாம் அதை செய்தவுடன் அவர்கள் நம் நாட்டுக்கு விரைந்து வருவார்கள், ஏனென்றால் நாம் பெரிய சந்தை. எல்லோரையும் விட நமக்கு இருக்கும் நன்மை என்னவென்றால் நாம் பெரிய சந்தை என்று தெரிவித்தார். விரைவில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அமெரிக்காவுக்கு மருந்து சப்ளை செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
அமெரிக்க சுகாதார அமைப்பில் இந்திய மருந்து நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2022ம் ஆண்டில் அமெரிக்காவில் விற்கப்படும் பத்து மருந்துகளில் நான்கு மருந்துகள் இந்திய நிறுவனங்களின தயாரிப்பாக இருந்தது. அந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க சுகாதார அமைப்பிற்கு 21,900 அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலையில், மருந்து பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்தால், உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும் மற்றும் மற்ற நாடுகளின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது விலை போட்டித்தன்மையை குறைக்கும் (உற்பத்தி செலவினம் அதிகரித்தால் விலையை குறைக்க முடியாது) என்பதால் இந்திய மருந்து உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரப்பரப்பை ஏறபடுத்தியுள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 1,272 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை ஏற்றுமதி துறையாக மாறியது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications