இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் வருமானம் சில முக்கிய துறைகளின் காரணமாக குறைந்து வருகிறது. அதாவதும் உற்பத்தி, நுகர்வு, தொடர்பு உள்ளிட்ட துறைகளால் வருமானம் வெகுவாக பாதிக்கிறது. இந்த நிறுவனங்களின் மொத்த வருவாயில் 40% முதல் 70% வரை பங்கு வகிக்கின்றன. இந்த துறைகளில் வருமானம் குறைவதால், பல பெரிய ஐடி நிறுவனங்களின் மொத்த வருமானத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேற்கண்ட துறைகள் இதுவரை வங்கி, நிதி சேவை, காப்பீடு போன்ற துறைகளுக்கு மாற்றாக வளர்ந்து வந்தவை. ஆனால் தற்போது, அமெரிக்கா விதித்த சுங்கக் கட்டணங்கள் காரணமாக விநியோக சங்கிலியில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் "Big Beautiful Bill" என்ற புதிய சட்டம் சில திட்டங்களை நிறுத்தவோ, செலவுகளை குறைக்கவோ காரணமாக உள்ளது. சுங்கக் கட்டணமும் அமெரிக்காவின் புதிய சட்டமும், இந்தியாவின் சில முக்கிய துறைகளில் வேலைநிறுத்தத்தையும், செலவுக் குறைபாடுகளையும் ஏற்படுத்தி ஐடி நிறுவனங்களின் வருமானத்தை பாதிக்கின்றன.

இதுகுறித்து டிசிஎஸ் (Tata Consultancy Services) நிறுவனம் கூறுகையில், "மருத்துவ தொழில்நுட்பத் துறையில் தற்போது பல பிரச்சனைகள் உள்ளன. அரசு விதிகள் கடுமையாகப் பரிசீலிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. செலவுகள் அதிகரித்து, புதிய வணிக முறைகள் உருவாகியுள்ளன. மேலும் ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகரித்து வருகின்றன" என்று கூறியுள்ளது.
InCred Equities ஆய்வு நிறுவனம் கூறுகையில், "மருந்து துறையில் விலை கட்டுப்பாடு, பொருட்கள் வழங்கல் சிக்கல்கள், ஏற்றுமதி அபாயங்கள் இருக்கின்றன. இதனால், இந்த துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), லாபம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டை முக்கியமாக கவனிக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் முன்னணி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வியாபாரிகளுடன் ஒத்துழைக்கின்றன.
டெக் மகேந்திரா நிறுவனம் தற்போது 70% வருமானத்தை இத்தகைய சிக்கலுள்ள துறைகளிலிருந்து பெறுகிறது. சமீபத்தில் முக்கியமான ஹை-டெக் ஒப்பந்தத்தை இழந்ததால், இப்போது அவர்கள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பாக வங்கி, நிதி சேவை, காப்பீடு மற்றும் சில்லறை வியாபாரம் துறைகளை நோக்கி மாறி வருகின்றனர்.
மேலும், உற்பத்தி மற்றும் வாகனத் துறைகள் தற்போது பெரும் தாக்கத்தை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் "Big Beautiful Bill" என்ற புதிய சட்டம், அதிரடியான சுங்கக் கட்டணங்கள் மற்றும் எரிசக்தி கொள்கை மாற்றங்களால், சந்தையில் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுத்தமான எரிசக்தி ஊக்குவிப்புகளின் பின்னடைவை காரணமாக, மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான தொழில்நுட்பங்களில் பணிபுரியும் உற்பத்தி மற்றும் வாகன நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது.
இதனால், சில சிக்கல்கள் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு காரணமாக நிறுவனங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐடி முதலீடுகளை தள்ளி வைத்துள்ளன. பொதுவாக மருந்துத் துறையும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. முன்னால் எதிர்பார்த்த வளர்ச்சி அளவுக்கு இல்லாமல், புதிய சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்கள் செலவுகளை மீண்டும் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அது முன்னதாகக் கணிக்கப்பட்டதைவிட குறைந்த வளர்ச்சி விகிதத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications