டிரம்ப் திட்டமிட்ட படியே ரெசிப்ரோக்கல் வரி மற்றும் அபராத வரியை விநாயகர் சதுர்த்தி தினம் முதல் நடைமுறைப்படுத்திய நிலையில், இனி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். இந்த 5 சதவீத வரி விதிப்பில் சில பொருட்களும், சேவை துறை விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிரம்ப் அடுத்த முக்கிய மாற்றத்தை செய்ய களத்தில் இறங்கியுள்ளார், ஆம் அடுத்த அதிரடி மாற்றம் என்றால் அது ஹெச்1பி விசா தான். கடந்த சில மாதங்களாக ஹெச்1பி விசா-வின் லாட்டரி முறையை மாற்றுவது குறித்த திட்டங்களை டிரம்ப் நிர்வாகம் விவாதித்து வருகிறது. இதன் நீட்சியாக அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹாவர்ட் லுட்னிக் அதிரடியாக பேசி பல கோடி இந்தியர்கள் கனவை கண்ணாடிப்போல் நொறுக்கியுள்ளது.

ஹாவர்ட் லுட்னிக் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, தற்போதைய H-1B விசா திட்டத்தை அமெரிக்கத் தொழிலாளர்களை வேலைவாய்ப்பு சந்தையில் இருந்து நீக்கும் ஒரு "SCAM" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் திட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தயாராகி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
டிரம்ப் தலைமையிலான அரசு H-1B விசாக்களில் செய்யப்படும் மாற்றங்கள் மூலம் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, இதற்கு முக்கிய காரணம் இதுநாள் வரையில் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையிலான ஹெச்1பி விசா பெறுவது இந்தியர்கள் தான். தற்போது கொண்டு வரப்படும் மாற்றங்கள் இந்தியர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையலாம். இதோடு டிரம்ப் அரசு ஹெச்1பி விசாவை தொடர்ந்து கிரீன் கார்டு முறைமையையும் மறுசீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
H-1B விசா திட்டத்தில் மாற்றங்கள்
அமெரிக்காவின் H-1B விசா திட்டம், தற்போது ஒரு குலுக்கல் முறையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த முறையை ஹாவர்ட் லுட்னிக் கடுமையாக விமர்சித்துள்ளார், இது அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
அமெரிக்க வேலைகளுக்கு முதலில் அமெரிக்கத் தொழிலாளர்களை அமர்த்துவதே பெரிய அமெரிக்க நிறுவனங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் ஃபாக்ஸ் நியூஸ் உடனான உரையாடலில் தெரிவித்தார்.
இதற்காக, தற்போதைய ஹெச்1பி விசா முறையை மாற்றி, ஊதிய அடிப்படையிலான தேர்வு முறையை அறிமுகப்படுத்துவதற்கு, தான் நேரடியாக ஈடுபட்டு வருவதாக லுட்னிக் உறுதிப்படுத்தினார். இந்த மாற்றம் மூலம் அதிக ஊதியம், அதீத திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என விளக்கம் கொடுத்தார்.
கிரீன் கார்டு முறைமையின் குறைபாடுகள்
தற்போதைய கிரீன் கார்டு முறையின் மூலம் தவறான நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஹாவர்ட் லுட்னிக் கூறினார். சராசரி அமெரிக்கர் ஆண்டுக்கு 75,000 டாலர்கள் சம்பாதிக்கிறார், ஆனால் சராசரி கிரீன் கார்டு பெறுபவர் 66,000 டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார். இது மிகவும் தவறான விஷயமாக உள்ளது, தற்போதைய முறையில் திறன் அளவில் கீழ்மட்டத்தை தேர்ந்தெடுப்பது போல உள்ளது என்று ஹாவர்ட் லுட்னிக் கூறினார்.
இந்த முறைமையை மாற்றி, உயர்ந்த திறன்களும், அதிக சம்பளம் பெறுபவர்கள் முன்னுரிமை அளிக்கும் வகையில் டொனால்ட் டிரம்பின் தலைமையில் குடியேற்றக் கொள்கை மறுவடிவமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கோல்டு கார்டு திட்டம்
சமீபத்தில் டிரம்ப் அரசு அறிமுகம் செய்த கோல்டு கார்டு என்ற குடியுரிமை திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் குறைந்தபட்சம் 5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதாக லுட்னிக் கூறினார், இதோடு இத்திட்டத்தின் முலம் முதலீடு செய்ய சுமார் 2,50,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும், இது மூலம் அமெரிக்க அரசுக்கு இலவசமாக 1.25 டிரில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டம், செல்வந்தர்களையும் உயர்ந்த திறன்களைக் கொண்டவர்களையும் அமெரிக்காவிற்கு ஈர்க்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
More From GoodReturns

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

ஈரானில் உச்சகட்ட பதற்றம்: கமேனி படுகொலை அடுத்து இடைக்கால ஆட்சியாளர் நியமனம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications